Don't Miss!
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Sports எழுதி வச்சிக்கோங்க! ஆளே மாறிட்டான்..நிச்சயம் பெரிய ஆளா வருவான்.. 22 வயது வீரரை பாராட்டிய சூர்யகுமார்
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Finance ஐஐஎம் பெங்களூரு: 516 பேருக்கு வேலை, சாராசரி சம்பளமே ரூ.32.5 லட்சமாம்..!
- Automobiles இந்தியா மட்டுமல்ல வெளிநாட்டுலயும் இந்த கார்கள் தான் செம ஃபேமஸ்! டாப் 10 லிஸ்ட் இதோ!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
2010ல் வெளியாகி தமிழ் ரசிகர்களால் கொண்டாட மறந்த திரைப்படம்.. ஆயிரத்தில் ஒருவன்.. இன்று வயது 10!
சென்னை: செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் இன்று உடன் பத்து ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
இதே நாள் பத்து வருடங்களுக்கு முன்பு பொங்கல் சமயத்தில் கார்த்தி, ரிமாசென், பார்த்திபன் மற்றும் அழகம் பெருமாள் நடித்து செல்வராகவன் இயக்கி ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்து வெளிவந்த திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன்.
இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களே அதிகம் கிடைத்தன. தற்போது இப்படத்தை தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர் தமிழ் ரசிகர்கள். இப்படத்தை அப்போது அப்படி விமர்சனம் செய்தவர்கள் எல்லாம் தற்போது இப்படத்தினை கொண்டாடுகிறார்களே என்ற கேள்வி பலருக்கு உண்டு.
கார்த்தி பருத்திவீரன் என்ற தனது முதல் படத்திலேயே தான் யார் தன் நடிப்பு எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் சொல்லாமல் சொல்லிவிட்டார். இவர் இரண்டாவதாக நடித்த திரைப்படம் தான் ஆயிரத்தில் ஒருவன். இதில் இவர் ஏற்ற கதாபாத்திரம் வேறு எவராலும் ஏற்று இருக்க முடியாது.
படத்தில் பார்த்திபனின் நடிப்பு அனைவரையும் பூரிப்பு அடைய செய்தது. ஒரு சோழ அரசனாக வரும் கதாபாத்திரம். இன்றளவும் மக்களிடையே அந்த கதாபாத்திரத்திற்கு ஒரு தனி இடம் உண்டு.
படத்தில் கார்த்தி மற்றும் ரீமாசென், ஆண்ட்ரியா மூவரும் தொலைந்து சென்ற ஆண்டிரியாவின் அப்பாவை தேடி செல்லும் காட்சிகள் ரசிக்க வைத்தது. சோழ மன்னர்கள் தாங்கள் செல்லும் பாதையில் யாரும் வர கூடாது என்று ஏழு ஆபத்துக்களை வைத்து செல்வர். அதனை கடந்து செல்லும் இந்த மூவரின் செயல்கள் பிரம்மிப்பு அடைய செய்தது.
கல்யாணம் பண்ணியாச்சு... குழந்தை பெத்தாச்சு... மீண்டும் நடிப்பில் களமிறங்கிய முன்னாள் ஹீரோயின்
கிளைமாக்ஸில் நடக்கும் அனைத்து காட்சிகளும் நம்மை உறைய வைக்கும். ஒரு மன்னர் இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரா என்று எல்லாம் நினைக்க வைத்தன. எத்தனை படங்கள் இவர் எடுத்தாலும் இது தான் இவரின் மாஸ்டர் பீஸ் என்று ரசிகர்களால் சொல்லப்படுகிறது.
இந்த ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் ரிலீஸ் ஆகி இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.