Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
இனி தளபதிக்கு பட வாய்ப்புகள் வருமா?: ஆர்யாவை காதலித்த அபர்னதிக்கு சந்தேகம்
Recommended Video
சென்னை: இனி தளபதிக்கு வாய்ப்புகள் வருமா என்று அபர்னதி கேள்வி எழுப்பியுள்ளார்.
விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள படம் டிராபிக் ராமசாமி. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி புகழ் அபர்னதி கலந்து கொண்டு பேசினார்.
அவர் எஸ்.ஏ. சந்திரசேகரின் நடிப்பை புகழ்ந்து பேசினார்.
பட வாய்ப்புகள்
இந்த படத்திற்கு பிறகு தளபதி சாருக்கு பட வாய்ப்புகள் வருமா? சந்திரசேகர் சாரின் நடிப்பு வேற லெவலில் உள்ளது. இந்த படம் பார்த்துவிட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக டிராபிக் ஆகிவிடுவேன் என்று நினைக்கிறேன் என்றார் அபர்னதி.
எஸ்.ஏ.சி.
பொதுவாக ராமசாமி என்பதே பிரபலமான பெயர். கவுண்டமணி செந்தில். ராமசாமி பணம் கிடைச்சுடும். இனிமேல் டிராபிக் ராமசாமியின் பெயர் தான் அதிகம் பேசப்படும் என்று நினைக்கிறேன். இந்த படம் 75 நாள், 100 நாள் வெற்றி நடைபோடுகிறது என்று செய்தி வர வாழ்த்துக்கள் என்று அபர்னதி தெரிவித்தார்.
விஜய்
இந்தாம்மா நீ எஸ்.ஏ.சி.யை புகழ வேண்டுமானால் புகழ்ந்து கொள். அதற்கு எதற்கு எங்க விஜய் அண்ணா பெயரை இழுக்கிறாய் என்று தளபதி ரசிகர்கள் லைட்டா டென்ஷனாகிவிட்டனர்.
பிக் பாஸ்
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அபர்னதியை அழைத்தார்களாம். அம்மணி தான் முடியாது என்று கூறிவிட்டாராம்.