அப்துல்கலாம் மறைவிற்கு இரங்கல்: நாளை தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் காட்சிகள் ரத்து
சென்னை: மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாமின் உடல் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று மதுரையை வந்து அடைந்து அங்கிருந்து ராமேஸ்வரம் கொண்டு செல்லப்பட்டது.
இன்று பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கபடும் கலாமின் உடல் நாளை தகனம் செய்யபடுகிறது, இதனையொட்டி நாளை தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா முழுவதுமே ஆங்காங்கே துக்கம் கடைபிடிக்கப் பட்டாலும், தமிழ்நாட்டில் இதன் தீவிரம் சற்று அதிகமாகவே உள்ளது. நாளை கடையடைப்பு மவுன அஞ்சலி என்று மக்கள் "மக்களின் ஜனாதிபதிக்கு" இறுதி மரியாதையை செலுத்துகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாளை தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் 2 நேரம் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்று திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம் அறிவித்து இருக்கிறார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் "முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் மறைவு இந்தியாவிற்கே பேரிழப்பாக அமைந்து இருக்கிறது. நாளை அவரின் உடல் அடக்கம் நடைபெறுவதையொட்டி காலை காட்சியும், பகல் காட்சியும் ரத்து செய்ய முடிவு செய்து இருக்கிறோம்" என்று கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











