Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'பெரிய நடிகர்கள் படம் ரெண்டு மூணு வாரம்தான் ஓடுது.. மத்த நேரங்கள்ல படங்களுக்கு எங்கே போறது?'
துவார் சந்திரசேகரின் எப்சிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள படம் பாக்கணும் போல இருக்கு. எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில், புதுமுகங்கள் பரதன், கீதிகா, பரோட்டா சூரி, கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் நடித்துள்ள படம் இது. அருள்தேவ் இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது. இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான், திரையரங்க உரிமையாளர் சம்மேளனத் தலைவர் அபிராமி ராமநாதன், நடிகை நமீதா உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய அபிராமி ராமநாதன், "இப்போதெல்லாம் சின்னப் படங்கள்தான் தியேட்டர்களை வாழ வைக்கின்றன. பெரிய நடிகர்களின் படங்களெல்லாம் இப்போது ரெண்டு மூணு வாரங்கள்கூட தாக்குப் பிடிக்கிறதில்ல. அப்புறம் படங்களுக்கு எங்கே போறது.. மிஞ்சிப் போனால் ஒரு ஆண்டுக்கு 12 பெரிய படங்கள் வரும். மீதி நாட்களில் கைகொடுப்பவை சிறு முதலீட்டுப் படங்களே.
இவற்றுக்கு தியேட்டர்கள் தர நாங்கள் தயாராகவே உள்ளோம். ஆனால் ஒரேயடியாக கூட்டமாக வராமல், உங்களுக்குள் ஒரு திட்டமிடலோடு வாருங்கள். சீமான் போன்றவர்களிடம் ஆலோசனை பெற்று ஒரு திட்டம் வகுத்து வாருங்கள். சின்னப் படங்கள் நல்ல லாபம் சம்பாதிக்க முடியும்," என்றார்.