Don't Miss!
- News வேலி தாண்டிய வெள்ளாடு.. கோவை லாட்ஜ் டூ திருச்சி லாட்ஜ்.. வெறும் 14 வயசு தான்.. என்ன கொடுமை இதெல்லாம்
- Lifestyle கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- Automobiles தார் ரோடு, பாறைகள் நிறைந்த ஆஃப்-ரோடு எதா இருந்தாலும் ஒரு கை பாத்திடலாம்! இந்தியாக்கு ஏத்த கார் விராங்ளர்!
- Technology உங்க மொபைலில் கூகுள் பே, போன் பே, பேடிஎம் செயலிகள் இருக்கா? இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க.. ஏன்?
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அபிராமின்னு கூப்பிட சொன்னேன்... அஜித்துன்னு கூப்பிட சொன்னார்
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த பின்னர் தான் நடித்த நேர் கொண்ட பார்வை படத்தைப் பற்றி பல இடங்களில் பேசி வருகிறார் அபிராமி. அஜீத் ரசிகர்களுக்கு நன்றியும் கூறி வருகிறார். இந்த நிலையில்தான் சூட்டிங் ஸ்பாட்டில் தான் அஜீத் உடனான அனுபவங்களையும் கூறியுள்ளார்.
நேர் கொண்ட பார்வை படத்தில் மூன்று பெண்களின் பாதிப்புகளைப் பற்றி கூறியிருப்பார்கள். சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்த அந்த பெண்களுக்கு ரசிகர்களிடையே வரவேற்பும் உள்ளது. ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகிய மூவருமே இந்த படத்தில் இஅற்புதமாக நடித்திருந்தனர்.
நேர் கொண்ட பார்வை ரிலீஸ் ஆன நேரத்தில் அபிராமி பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். போனவாரம்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தார். மல்டி பிளக்ஸ் தியேட்டரில் போய் படம் பார்த்த அவருக்கு அஜீத் ரசிகர்கள் கொடுத்த அன்பான வரவேற்பில் திக்குமுக்காடிப் போனார். உடனே நன்றி சொல்லி வீடியோ வெளியிட்டார்.
நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பின் போது நேரிட்ட அனுபவங்களையும் அஜீத் உடனான அனுபவங்களைப் பற்றியும் பேட்டி கொடுத்து வருகிறார் அபிராமி.
அப்போதுதான் படப்பிடிப்பில் எங்களின் முழு கவனமும் அஜீத் மீதே இருக்கும் என்று சொன்னார். நாங்க அஜீத்தை பார்த்துக்கொண்டே இருப்போம். அவர் நாங்க பார்ப்பதை பாத்து விடுவார் என்றும் கூறியிருக்கிறார்.
பேசும் போதே அடிக்கடி ஜி ஜி என்று சொல்லுவார். எதற்கு ஜின்னு சொல்றீங்க. பேசாம அபிராமின்னு கூப்பிடுங்கன்னு சொன்னேன். அதற்கு அவரோ, மரியாதை எல்லாருக்கும் கொடுக்கணும் என்று சொல்வார். படம் ரிலீஸ் ஆகிறப்ப நான் இல்லை. என்னைய மிஸ் பண்ணதா சொன்னாங்க. அஜீத் கிட்ட மறுபடியும் பேச முடியுமா தெரியலை என்று கூறியுள்ளார் அபிராமி.