சச்சினை கட்டிப்பிடித்த ஐஸ்வர்யா ராய்: கடுப்பான கணவர் அபிஷேக் பச்சன்
மும்பை: சச்சின் டெண்டுல்கரை ஐஸ்வர்யா ராய் கட்டிபிடித்தது அவரது கணவர் அபிஷேக் பச்சனுக்கு பிடிக்கவில்லை என்று இந்தி மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாறு சச்சின் எ பில்லியன் ட்ரீம்ஸ் என்ற பெயரில் படமாக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

படம் பார்த்தவர்கள் அனைவரும் அதை பாராட்டி வருவதுடன் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நண்பர்களுக்கு பரிந்துரை செய்து வருகிறார்கள். முன்னதாக பாலிவுட் பிரபலங்களுக்காக சச்சின் படத்தின் ஸ்பெஷல் ப்ரீமியர் ஷோ மும்பையில் நடந்தது.
அந்த ஷோவுக்கு தனது கணவர் அபிசேக் பச்சனுடன் வந்திருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராய். அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் மத்தியில் சச்சினை ஆஹா, ஓஹா என்று புகழ்ந்து பேசிவிட்டு அவரை கட்டிப்பிடித்தார் ஐஸ்.

ஐஸ் சச்சினை கட்டிப்பிடித்தது பிடிக்காமல் அபிஷேக் பச்சன் முகம் கடுகடுத்ததாக இந்தி மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாலிவுட்டில் நட்புக்காக கட்டிப்பிடிப்பது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications