Just In
- 3 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 3 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 4 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 5 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- Automobiles
இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தீவிரம்காட்டும் சுஸுகி!! டெல்லியில் மீண்டும் சோதனை
- News
எல்லையில் அத்துமீறல் விவகாரம்... சீனாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது இந்தியா..!
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Lifestyle
பேபி பொட்டேடோ மஞ்சூரியன்
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
எனக்கும் என் பொண்டாட்டிக்கும் சண்டையா? டிவிட்டரில் பொங்கிய வாரிசு நடிகர்!

மும்பை ஐஸ்வர்யா ராய்க்கும் கணவர் அபிஷேக் பச்சனுக்கும் மோதல் என வெளியான தகவலை அபிஷேக் பச்சன் மறுத்துள்ளார்.
ஐஸ்வர்யாராய்க்கும், இந்தி சூப்பர் ஸ்டாரான அமிதாப்பச்சனின் மகனும் நடிகருமான அபிஷேக் பச்சனுக்கும் 2007 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஆராத்யா என்ற பெண் குழந்தை உள்ளது.
ஐஸ்வர்யா ராய்க்கும், அபிஷேக்பச்சனுக்கும் சமீப காலமாக நல்ல உறவு இல்லை என்று தகவல் பரவியது. அபிஷேக்பச்சன் தாயாருக்கும் ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மாமியார் மருமகள் சண்டை நடப்பதாகவும் தகவல் வெளியானது.

ஐஸ்வர்யாவுடன் மோதல்
இந்நிலையில் அபிஷேக் பச்சன் சகோதரி ஸ்வேதாவுக்கும் ஐஸ்வர்யா ராயை பிடிக்கவில்லை என்று பேசப்பட்டது. திருமணத்துக்கு பிறகு ஐஸ்வர்யாராய் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.

தனிக்குடித்தனம்
வேறு நடிகர்களுடன் அவர் நெருக்கமாக நடிப்பதை அபிஷேக் பச்சன் விரும்பவில்லை என்றும் கூறப்பட்டது. மாமியார் மருமகள் சண்டை காரணமாக மும்பையில் புதிதாக வாங்கிய வீட்டுக்கு தனிக்குடித்தனம் செல்ல அபிஷேக் பச்சனிடம் ஐஸ்வர்யாராய் வற்புறுத்தியதாகவும் கூறினர்.

வைரலான வீடியோ
இந்த நிலையில் அபிஷேக் பச்சனுக்கும், ஐஸ்வர்யாராய்க்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியானது. இருவரும் லண்டனுக்கு சென்று திரும்பியபோது மும்பை விமான நிலையத்தில் சண்டை போட்டதாக வீடியோ ஒன்றும் வெளியானது.

பொங்கிய அபிஷேக் பச்சன்
இதுகுறித்து அபிஷேக் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார். அதாவது‘‘தயவு செய்து தவறான தகவலை வெளியிட வேண்டாம். தொடர்ந்து ஏதாவது போஸ்ட் போட வேண்டும் என்ற தேவை இருப்பதை நான் புரிந்துகொள்கிறேன்.

பொறுப்போடு நடந்துகொள்ளுங்கள்
ஆனால் தவறான தகவலை வெளியிடாமல் பொறுப்புணர்வுடன் உண்மை தகவலை மட்டும் வெளிப்படுத்துங்கள்''இவ்வாறு அபிஷேக் பச்சன் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.