Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
முன்னாள் காதலரை பார்த்து நெளிந்த ஐஸ்வர்யா ராய்: உதவிக்கு வந்த கணவர்
Recommended Video
மும்பை: சோனம் கபூரின் திருமண நிகழ்ச்சியில் சல்மான் கானை பார்த்து நெளிந்த ஐஸ்வர்யா ராய்க்கு அபிஷேக் ஆதரவாக இருந்துள்ளார்.
பாலிவுட் நடிகை சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சனுடன் கலந்து கொண்டார். அபிஷேக்கும், சோனமும் சேர்ந்து படங்களில் நடித்துள்ளனர்.
அந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கு சல்மான் கானும் வந்திருந்தார்.
சல்மான்
தனது முன்னாள் காதலரான சல்மான் கானை பார்த்தும் பார்க்காதது போன்று ஐஸ்வர்யா ராய் இருந்தார். சல்மான் வந்த பிறகு ஐஸ்வர்யா அசவுகரியமாக உணர்ந்ததை அபிஷேக் புரிந்து கொண்டார்.
மனைவி
அபிஷேக் வேறு எங்கும் செல்லாமல் ஐஸ்வர்யா ராயுடனேயே இருந்தார். சல்மான் கான் மேடையில் ஏறியதும் அபிஷேக்கும், ஐஸ்வர்யாவும் சத்தமில்லாமல் அந்த இடத்தில் இருந்து கிளம்பிச் சென்றுவிட்டனர்.
கத்ரீனா
நடிகை கத்ரீனா கைஃபின் முன்னாள் காதலரான நடிகர் ரன்பிர் கபூர், ஆலியா பட்டுடன் வந்தார். ஆலியாவும், ரன்பிரும் காதலிப்பதாக பேசும் நிலையில் ஜோடியாக வந்தனர். ஆலியாவை பார்த்த கத்ரீனா அவர் அருகில் சென்று பேசி, புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
ஷாருக்கான்
ஒரு காலத்தில் எதிரிகளாக இருந்த சல்மான் கானும், ஷாருக்கானும் சோனம் கபூர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் சேர்ந்து டான்ஸ் ஆடியது அங்கிருந்தவர்களை வியக்க வைத்தது.