Don't Miss!
- News ஓட்டு போட லீவு விட்டா எங்க போனீங்க!சென்னையில் சரிந்த வாக்கு பதிவு..கடந்த தேர்தலை விட இவ்வளவு குறைவா?
- Finance சென்னை லயோலா-வில் படித்த அஜித்.. பெங்களூரிலேயே காஸ்ட்லியான இடத்தை வாங்கியிருக்கிறார்.. யார் இவர்..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஆரம்பத்தில் என்னை குழப்பிய கூட்டத்தில் நீங்களும் ஒருவர்… அபிஷேக்கை கிண்டலடித்த கமல்ஹாசன் !
சென்னை : பிக் பாஸ் 5வது சீசனில் இன்று முதல் எலிமினேஷன் நடைபெற இருக்கிறது.
மொத்தம் 15 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் இருந்த நிலையில் நேற்று பத்து பேர் காப்பாற்றப்பட்டதாக கமல் அறிவித்தார்.
மீதமிருக்கும் 5 நபர்களில் ஒருவர் கண்டிப்பாக வெளியேற்றப்படுவார் என கமல் அறிவித்து இருக்கிறார்.
ஏராளமான ரசிகர் கூட்டம்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சியை தொடங்கி வைத்த கமல்ஹாசன், போட்டியாளர்களிடம் கலகலப்பாக கலந்துரையாடினார். அப்போது, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு நாளுக்கு நாள் ரசிகர் கூட்டம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது என்றார்.
செல்போனில் பார்த்தேன்
இதையடுத்து, யார் யார் எல்லாம் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்துள்ளீர்கள் என்றார். அப்போது இமாம் அண்ணாச்சி, ஷூட்டிங் இருந்ததால் இந்த நிகழ்ச்சியை நான் பார்த்தது இல்லை என்றார். இதையடுத்து பேசிய தாமரைச்செல்வி, நான் இந்த நிகழ்ச்சியை பார்த்தது இல்லை சார்... இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்புதான் இந்த நிகழ்ச்சியை செல்போன் மூலம் பார்த்தேன் என்றார்.
பார்க்கவில்லை
இதையடுத்து பேசிய, அபிஷேக் இந்த நிகழ்ச்சியை நானும் பார்த்ததே இல்லை... அதற்கான காரணத்தை நான் சொல்கிறேன். உங்களின் படத்தைப் பற்றித்தான் நான் என் தேடல் இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சியை நீங்கள் தொகுத்து வழங்கியதால் நான் பார்க்கவில்லை. மேலும், நீங்கள் தொகுத்து வழங்காமல் வேறு யாராவது தொகுத்து வழங்கி இருந்தால் பார்த்து இருப்பேன் இருந்தார்.
குழப்பிய
இதற்கு பதிலளித்த கமல் ஹாசன், ஆரம்பத்தில் என்னை குழப்பிய கூட்டத்தில் நீங்களும் ஒருவர் என்று அபிஷேக்கை கிண்டலடித்து பேசினார். பல பேர் என்னை பார்த்து என்ன சார்... இதுல போய் மாட்டிகிட்டீங்க என்று கேட்டனர். என்னை பார்த்த கண்களின் எண்ணிக்கை.... என்னுடைய மனதை பிக் ஸ்கிரினாக மாற்றி விட்டது என்றார். சினிமாவை விட சின்னத்திரைக்கு நிறையே ரசிகர்கள் இருக்கிறார்கள். ஒன்றை கூட்டி ஒன்றை குறைத்து சொல்லவில்லை.. எனக்கு சோறு போட்டாது சினிமா தான்... இன்னும் எனக்கு பிரியாணி போடுகிறது என்று நகைச்சுவையாக கூறினார்.