டீன் ஏஜில் ஆராத்யா....: அபிஷேக்பச்சனின் ஆசை
மும்பை: தன் மகள் ஆராத்யா தன்னைப் போலவே பெற்றோரை மதிப்பவராக இருக்க வேண்டும் என தான் விரும்புவதாகத் தெரிவித்துள்ளர் அபிஷேக் பச்சன்.
பிரபல் ஹிந்தி நடிகரான அபிஷேக்பச்சன் தற்போது தூம்3 மற்றும் ஹேப்பி நியூ இயர் படங்களில் நடித்து வருகிறார்.
தனது இரண்டு வயது மகள் எதிர்காலத்தில் தன்னைப் போலவே பெரியவர்களை மதித்து வாழ வேண்டும் என தான் விரும்புவதாக தெரிவித்துள்ளார் அபிஷேக்.

ஆறு வருடங்களுக்கு முன்...
ஹிந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்- ஜெயாபச்சன் ஜோடியின் வாரிசான அபிஷேக்பச்சனுக்கும், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

2 வயது மகள்....
அபிஷேக்-ஐஸ்வர்யா தம்பதிகளின் மகள் ஆராத்யாவிற்கு வரும் நவம்பரில் 2 வயது பூர்த்தியாக உள்ளது. இந்நிலையில் தன் மகள் தன்னைப் போலவே வளரவேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார் அபிஷேக்.

ஆராத்யாவின் டீன் ஏஜ்...
மேலும், இது குறித்து அவர் கூறியிருப்பதாவது, ‘என் மகள் ஆராத்யா, தனது டீன் ஏஜில் என்னைப் போலவே பெற்றோரை மதிப்பவளாக இருப்பாள் என நான் நம்புகிறேன்.

மதிப்பும், மரியாதையும்....
இன்றளவும் நான் என் பெற்றோரை மதித்து, கீழ்படிந்து நடந்து கொள்கிறேன். எனவே, என் மகளும் என்னைப் போலவே எதிர்காலத்தில் என்னையும், ஐஸ்வர்யாவையும் மதிப்பவளாக இருப்பாள்' என்றார்.


Click it and Unblock the Notifications











