Don't Miss!
- Technology iPhone-க்கு நெத்தி அடி.. வயர்லெஸ் MagCharge உடன் வந்த முதல் ஆண்ட்ராய்டு போன்.. Samsung இல்லை OnePlus இல்லை..
- News "டெல்லியில் ஜனாதிபதி ஆட்சி?" கவர்னர் சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஆம் ஆத்மி பதிலடி.. சட்டம் சொல்வது என்ன
- Sports ஆர்சிபி வேண்டாம் என ஒதுக்கிய 3 வீரர்கள்.. ஐபிஎல் 2024 சீசனில் பட்டையை கிளப்பும் அதிசயம்
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அபிராமிம்மா.. அவ்ளோ நல்லவளா நீ? பிக்பாஸ் வீட்ல என்னன்னவோ நடக்குதே!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான ப்ரமோவில் கண்ணீர்விட்டு அழும் மீராவுக்கு தண்ணீர் கொடுக்கிறார் அபிராமி.
பிக்பாஸ் வீட்டில் 16வது போட்டியாளராக பங்கேற்றிருப்பவர் மீரா மிதுன். 2016ஆம் ஆண்டுக்கான ஃபெமினாஸ் மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர் மீரா.
அழகி போட்டி நடத்துவதாக கூறி பல பெண்களிடம் பணம் மோசடி செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டதை தொடர்ந்து அந்தப் பட்டம் திரும்ப பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு பிக்பாஸ் வீட்டில் நுழைந்தார் மீரா.
Roja Serial: முதலிரவு நடந்தா உங்களுக்கு என்ன?.. கர்மம் ஃபார்முலாவை மாத்துங்க!
கார்னர் செய்யப்படும் மீரா
மீரா பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது அபிராமிக்கும் சாக்ஷிக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அதனை பகிரங்கமாகவே கூறினர் இருவரும். அவர்களுடன் நடிகை ஷெரினும் கூட்டு சேர்ந்து கார்னர் செய்ய தொடங்கினர்.
பாடாய் படுத்தும் குரூப்
நேற்று தேவை இல்லாத ஒரு பிரச்சனையை பெரிதாக்கி பிக்பாஸ் வீட்டின் கேப்டனான வனிதா மீராவை அழ வைத்தார். எப்படியோ அபிராமி, சாக்ஷி, ஷெரின், வனிதா என கூட்டு சேர்ந்து மீராவை பாடாய் படுத்த தொடங்கிவிட்டனர்.
சண்டையின் போது
மீராவை, அபிராமி நேற்றும் சரி அதற்கு முந்தைய நாளும் சரி கண்டபடி அவள், இவள் என திட்டியதோடு, பேக், பொய் என்றெல்லாம் பேசினார். நேற்று நடைபெற்ற சண்டையின் போது கூட மூஞ்சில் அடித்தாற் போல் பேசினார்.
ஃபாத்திமாவிடம் அழும் மீரா
இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள ப்ரமோவில் மீரா மிதுன், ஃபாத்திமா பாபுவிடம் என் மீது பொறாமைபடுவதை என பிடிக்காது அது எனக்கு கஷ்டமான விஷயம் என்றும் அவர் கூறுகிறார். மேலும் என்னால் ஃபீல் பண்ணமுடியும் ஏன் பேசுறாங்க? எதுக்காக பேசுறாங்க என்று கூறி கண்ணீர் விடுகிறார்.
தண்ணீர் கொடுக்கும் அபிராமி
இதனை வாக்கிங் போவது போல் கவனிக்கும் அபிராமி ஒரு கிளாஸில் மீராவுக்கு குடிக்க தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கிறார். அதனை வாங்கி மீராவும் குடிக்கிறார், இப்படியாக முடிகிறது அந்த ப்ரமோ.
அவ்வளவு நல்லவளா நீ?
மீரா அழுகைக்கு நிச்சயம் அபிராமி, சாக்ஷி, வனிதா, ஷெரின் ஆகியோர்தான் காரணமாக இருப்பார்கள். ஏனெனில் மீரா வந்த நாளில் இருந்து அவர்களுக்குதான் அவரை கண்டாலே பிடிக்கவில்லை. அவர்கள் பேசியதாலேயே கண்டிப்பாக மீரா அழுதிருப்பார். ஆனால் மீரா அழும்போது நல்லவர் போல் தண்ணீர் கொண்டுவந்து கொடுக்கிறார் அபிராமி. அபிராமிம்மா.. அவ்வளவு நல்லவளா நீ என கேட்கின்றனர் ப்ரமோவை பார்த்த ரசிகர்கள்!