Don't Miss!
- News தேர்தலுக்கு ஓட்டு போட போறீங்களா? மீண்டும் கலங்கடித்த ஆம்னி! ஊர்களுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிப்பு
- Technology அதிரி புதிரி ஆர்டர்.. 108எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. ஆஃபரில் ரெட்மி 5ஜி போன்.. எந்த மாடல்?
- Education காரக்பூர் ஐஐடி-யில் செயற்கை நுண்ணறிவு படிப்பு படிக்க ஆசையா...!!
- Lifestyle இளநீர் Vs எலுமிச்சை ஜூஸ்: இவற்றில் கோடையில் குடிக்க சிறந்தது எது?
- Finance ரேஷன் கார்டு இல்லாமலே.. ரேஷனில் விற்கும் பொருட்களை வாங்கலாம்.. எப்படி? இதை நோட் பண்ணுங்க
- Automobiles திரும்பி வரதே வாங்கிய அடிய திருப்பி கொடுக்கதானா! ஃபேமிலியோட போற மாதிரியான காருக்கு பேடண்ட் பதிவை பெற்ற ஃபோர்டு
- Sports இந்திய அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை கழட்டி விட திட்டம்.. ரோஹித் - அகர்கர் சந்திப்பில் ட்விஸ்ட்
- Travel தமிழக அரசு சார்பில் சென்னையில் கோடை நீச்சல் முகாம்கள் – உங்கள் வீட்டு குட்டீஸ்களை சேர்க்க மறக்காதீர்கள்!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எப்படி வெளியேறினேன் தெரியுமா? ஓப்பனாக சொன்ன அபிஷேக் ராஜா!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நிலையில், யூடியூப் விமர்சகர் அபிஷேக் ராஜா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள விளக்கம் வைரலாகி வருகிறது.
அபிஷேக் ராஜா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்றதும் ஏகப்பட்ட சினிமா ரசிகர்கள் மற்றும் யூடியூப் ரசிகர்கள் அவருக்கு சப்போர்ட் செய்தனர்.
ஆனால், நிகழ்ச்சியில் அவர் பேசியது மற்றும் விளையாடிய விதம் பலருக்கும் பிடிக்காத நிலையில், அவரை ட்ரோல் செய்யத் தொடங்கினர்.
அபிஷேக் மீது கொலை காண்டில் இருக்கும் நாடியா சங்... என்ன வீடியோ ஷேர் பண்ணியிருக்காங்க பாத்தீங்களா?
கருணையே காட்டல
கடந்த சீசனில் எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் அறிமுகம் செய்யப்பட்ட அந்த வாரமே அது பயன்படுத்தப்பட்டது. ஆனால், கடந்த வாரம் முழுக்க ஹவுஸ்மேட்கள் பஞ்ச தந்திர டாஸ்க்குக்காக விளையாடிய நிலையில் கடைசி நேரத்தில் எலிமினேஷனில் இருந்து அபிஷேக்கை காப்பாற்ற யாரெல்லாம் நாமினேஷன் பண்ணாங்களோ அவர்களே காப்பாற்றுவது போல துடித்தும் அபிஷேக் ராஜாவுக்கு எந்தவொரு கருணையும் காட்டாமல் அவரை கமல் அதிரடியாக வெளியேற்றினார்.
பாராட்டவில்லை
நாடியா சங்கை பாராட்டி வழியனுப்பிய அளவுக்கு கமல் சார் அபிஷேக் ராஜாவை வாழ்த்தி வழியனுப்பவில்லை என்றும் அவர் பேச்சில் ஒருவித எரிச்சல் கலந்தே இருந்தது என்றும் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிற அட்வைஸ் தொனியே அதிகமாக இருந்ததாகவும் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.
மிக்சர் தின்னுபவர்களை
அபிஷேக் ராஜா போன்ற கன்டென்ட் கிங்குகளை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டு அபிநய், மதுமிதா, வருண், சின்ன பொண்ணு, ஐக்கி பெர்ரி போன்ற மிக்சர் தின்னுபவர்களை பல வாரங்கள் காப்பாற்றி இந்த முறையும் மொக்கை ஷோவாகவே பிக் பாஸை கொண்டு போக போகின்றனர் என்றும் விளாசி வருகின்றனர்.
அபிஷேக் விளக்கம்
இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிஷேக் ராஜா இரண்டு நாட்கள் ஓய்வெடுத்து விட்டு நேற்று இரவு தனது ட்விட்டர் பக்கத்தில் போட்டுள்ள விளக்க ட்வீட் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அவர்து விளக்கத்திற்கு கீழ் ஏகப்பட்ட நெட்டிசன்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
ஈக்வேஷனை உருவாக்கி
பிக் பாஸ் நிகழ்ச்சி ஒரு கேம் ஷோ அதில் எப்போதும் பரபரப்பாக இருந்து ரசிகர்களை மகிழ்விக்க வேண்டும் என்கிற விதியை பின்பற்றியே இந்த ஆட்டத்தை நான் விளையாடினேன். சக போட்டியாளர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு ஈக்வேஷனை உருவாக்கி அவர்களுடன் ஜெல் ஆனானேன். நீண்ட நாட்கள் இருப்போம் என நினைத்து நான் விளையாடி வந்த நிலையில், திடீரென வெளியேறிவிட்டேன்.
உண்மையா இருப்பது தப்பா
ஆனால், நான் நானாக இருந்து விளையாடி வெளியேறினேன் என்கிற மன நிறைவுடன் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினேன். ஒருத்தன் உண்மையா இருந்து விளையாடியது தப்புன்னா நான் என் கேமை எப்படி விளையாடுறது? என் வாழ்க்கையை எப்படி வாழ்வது? என்கிற கேள்விகளையும் முன் வைத்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார் அபிஷேக் ராஜா.
மத்தவங்க கேமை கெடுத்தீங்க
உங்க வாழ்க்கையை நீங்க எப்படி வேண்டுமானால் விளையாடலாம். அதற்காக எல்லாம் நீங்க வெளியே அனுப்பப்படல அபிஷேக். மத்தவங்க கேமை உங்களுக்காக நீங்க கெடுக்கப் பார்த்தீங்க அதுக்குத்தான் வெளியே துரத்திட்டாங்க.. உங்களுக்கு ஒரு டிப் தரேன்.. பேசுறதுக்கு முன்னாடியே நிறைய காது கொடுத்து கேளுங்க.. புரிஞ்சுக்கோங்க.. அப்புறம் பேசுங்க என இந்த நெட்டிசன் அபிஷேக்கிற்கு அட்வைஸ் செய்துள்ளார்.
போர் அடிக்குது
அபிஷேக் ப்ரோ உங்களை எனக்கு பிடிக்கும். ஆனால், பிக் பாஸ்ல நீங்க மட்டும் தான் புத்திசாலின்னு நினைச்சி நிறைய பேசிட்டீங்க அது தான் பல பேருக்கு பிடிக்கல. நெகட்டிவ் பாசிட்டிவா விடுங்க நீங்க இருந்த வரைக்கும் பிக் பாஸ் பீக்ல போச்சு இப்போ ரொம்பவே போர் அடிக்குது என அபிஷேக்கிற்கு ஆதரவாக இந்த ரசிகர் கருத்து தெரிவித்துள்ளார்.
அலப்பறை அதிகமா இருக்கும்
"இவன வோட் அவுட் பண்ணாதீங்கடா உள்ள விட வெளிய தான் இவனோட அலப்பறை அதிகமா இருக்கப் போகுதுனு சொன்னா எவனாவது கேட்டானுங்களா?? இப்ப பாரு பீட்டர் என்ன சொல்றான்னே தெரில!!" என இந்த நெட்டிசன் பங்கமாக கலாய்த்து வருகின்றனர். மேலும், பல நெட்டிசன்கள் அபிஷேக்கை திட்டியும் ரசிகர்கள் ஆதரவு கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.