Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பைத்தியம் முத்திடுச்சு போல.. சுடுதண்ணீர் எடுத்து தலையில் ஊற்றிய அபிஷேக்.. அடுத்து என்ன?
சென்னை: அந்த கொசுவை அடிச்சி தொலை என பிரியங்காவின் மண்டையில் உரைக்கும் படி அமீர் சொல்லியும் பிரியங்காவுக்கு புரியாது என்பது கன்ஃபார்ம் ஆகிடுச்சு.
சுவாரஸ்யத்துக்காக என்னையே நான் கொளுத்திக்கவும் தயார் என சொன்ன அபிஷேக் ராஜா, சுடுதண்ணீரை எடுத்து தலையில் ஊற்றியது போல கொடுத்த ஆக்டிங் வேற லெவல்.
அதை பார்த்து பதறாமல் பிக் பாஸ் ரசிகர்கள் பைத்தியம் முத்திடுச்சு போல என கலாய்த்து வருகின்றனர்.
வெளியேற வேண்டியது தான்
பிக் பாஸ் அன் அஃபிஷியல் போலிங்கில் இதுவரை அபிஷேக் ராஜா தான் குறைவான ஓட்டுக்களுடன் கடைசி இடத்தில் உள்ளார். அவருக்கு ரசிகர்கள் கொஞ்சமாச்சும் சேர்ந்து ஓட்டுப் போட வேண்டும் என தொடர்ந்து இரண்டு வாரங்களாக பெஸ்ட் பர்ஃபார்மர் அவார்டு கொடுக்கப்பட்டாலும் இந்த வாரம் அபிஷேக் ராஜா தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என உறுதியான தகவல்கள் வெளியாகி உள்ளன.
பிரிக்கணும்
பிரியங்காவையும் நிரூப்பையும் பிரிக்க வேண்டும் என்கிற சூழ்ச்சியோடு தான் அபிஷேக் ராஜா பிரியங்காவிடம் நட்பு பாராட்டுகிறார் என்றும் இந்த சீசனில் ஏகப்பட்ட சைக்கோக்களை உள்ளே அனுப்பி விட்டார் பிக் பாஸ் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
வேலை வாங்கிய பிரியங்கா
தாமரை கஷ்டப்பட்டு பாத்திரம் கழுவுவது பிடிக்கவில்லை என்பதை விட ராஜு மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக கத்தி சண்டையை இழுத்துவிட்ட பிரியங்காவால் ஒரு டம்ளர் தண்ணி கூட சொந்தமாக போய் எடுத்துக் கொள்ள முடியாத வேடிக்கை தான் என்ன என ரசிகர்கள் கேட்டு சிரிக்கின்றனர்.
சுடுதண்ணியை தலையில் ஊற்றி
மக்கள் எனக்கு பிச்சை போட்டு இருக்காங்க என மக்களிடம் ஓட்டுப் பிச்சைக்கு அடிபோட்ட அபிஷேக் ராஜா தன்னை கொளுத்திக் கொண்டாவது சுவாரஸ்யத்தை கொடுப்பேன் என சொன்ன நிலையில், பிரியங்காவுக்கு குடிக்க எடுத்த சுடுதண்ணியை தனது தலையில் ஊற்றியது போல சீன் போட்டு பிரியங்காவை உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து எழுந்து தன் பக்கம் வர வைத்து விட்டார். இதுக்கு தண்ணியை அவங்களே எடுத்து குடிச்சிருக்கலாம்.
அந்த கொசுவை அடி
ராஜு டீம், பிரியங்கா டீம், பாவனியுடன் நட்பு என அனைத்து மேட்டர்களையும் உள்வாங்கிக் கொள்ளும் ஒற்றனான அமீர் பிரியங்காவுக்கு மட்டும் கூடுதல் சப்போர்ட் செய்யவே தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். உன்னை சுற்றி வரும் அந்த கொசுவை அடித்து விரட்டு அந்த மோசமான நட்பால் உன் பெயர் டேமேஜ் ஆகுது பிரியங்கா அக்கா என அபிஷேக்கின் நட்பை துண்டிக்க சொல்லியும் அபிஷேக்கின் கட்டிப்பிடி வைத்தியம் மற்றும் முத்தம் காரணமாக பிரியங்கா நிரூப்பின் நட்புக்கு துரோகம் செய்து விட்டு அபிஷேக்கின் நட்பு வலையில் விழுந்து கிடக்கிறார்.