Don't Miss!
- Sports கேமரா மேனை சிக்சரால் பதம் பார்த்த ரிஷப் பண்ட்.. விசயம் தெரிந்த உடன் பண்ட் செய்த நெகிழ்ச்சி சம்பவம்
- News தோசைக்கு ஏன் ‛தோசை’னு பெயர் வந்தது தெரியுமா? அட இவ்வளவு நாள் தெரியாம போச்சே! சுவாரசியம்
- Technology Youtube சோலி முடிஞ்சு.. இறங்கி அடிச்ச எலான் மஸ்க்.. AI அம்சம்.. ஸ்மார்ட் டிவிகளில் புதிய ஆப்..
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
திடீரென சிம்பு மாதிரி பேசிய அபிஷேக்...காரணம் புரியாமல் குழம்பிய ரசிகர்கள்
சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக ஒன்பதாவது வாரத்தை நிறைவு செய்துள்ளது. கொரோனா பாதிப்பிற்காக மருத்தவமனையில் சிகிச்சை பெற்றதால் பிக்பாஸ் ஷோவிற்கு வர முடியாத கமல், இந்த வாரம் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
வந்த முதல் நாளே பிரியங்கா, அபிஷேக் இடையேயான நட்பை கடுமையாக விமர்சித்தார். இது அன்பை காட்டுவதற்கான கேம் கிடையாது. அதை வெளியில் போய் கூட தொடருங்கள் என கமல் கூறியதையும், மற்றவர்கள் பற்றி பிரியங்கா கூறிய குற்றச்சாட்டுக்களுக்கு கமல் கொடுத்த பதில்களையும் பார்வையாளர்கள் கைதட்டி, ரசித்து வரவேற்றனர்.
விரைவில் மாஸ்டர் செஃப் தமிழ் சீசன் 2 ஆரம்பம் ... புதிய பிரமோ வெளியீடு
புலம்பும் பிரியங்கா
இதற்கிடையில் இன்றைய நிகழ்ச்சியின் சனிக்கிழமை நிகழ்வுகளும் சேர்த்து காட்டப்பட்டது. இதில் கார்டன் ஏரியாவில் அபிஷேக், அபினய் மற்றும் பிரியங்கா ஆகியோர் பேசிக் கொண்டிருக்கையில், நிரூப்பை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார் பிரியங்கா. நான் அவனை அண்ணாச்சியிடம் பேச கூடாது என ஒரு போதும் சொல்லியதில்லை. ஆனால் அவன் இன்று என்னை கேள்வி கேட்டதால் சந்தோஷமாக இருக்கிறான் என்கிறார் பிரியங்கா.
மெட்ரோ லாரியா நீ
அதற்கு பிரியங்காவை கலாய்க்கும் அபிஷேக், அப்படியானால் நீங்கள் மெட்ரோ வாட்டர் கொடுக்குற லாரி போல எந்த ஏரியாவிற்கு தேவைப்படுகிறதோ அங்கு கொண்டு போய் கொடுப்பீர்கள். அன்பு தேவைப்படும் போது போய் கொடுப்பீர்களா என கேட்கிறார். நிரூப்பிற்கு அன்பை பார்த்ததில்லை என்பதால் நீ காட்ட நினைக்கிறாயா என்கிறார்.
அன்பால் கடுப்பாகும் பிரியங்கா
நீங்கள் காட்டும் அன்பு ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் என நினைக்கிறீர்கள். அதில் ஒன்று சிபி, மற்றொன்று நிரூப். இவர்களை உங்களின் அன்பு மாற்று என்கிறீர்கள் என்கிறார் அபிஷேக். அப்போது குறுக்கிடும் பிரியங்கா, அன்பு என்ற வார்த்தையை சொல்லாதே எனக்கு கடுப்பாகிறது என்கிறார்.
சிம்புவாக மாறிய அபிஷேக்
இதனால் கடுப்பாகி பேசும் அபிஷேக், திடீரென சிம்புவை போல் குரலை மாற்றி, சரிங்க பாசம். அப்புறம் என்னை என்ன சொல்ல சொல்கிறீர்கள் நட்பா. சரிங்க நட்புங்க. சரிங்க. இப்ப தான சொல்றீங்க நட்புன்னு. இவ்வளவு நாளா அன்பு, பாசன்னு தான சொல்லிட்டு இருந்தீங்க என்கிறார்.
குழம்பிய ரசிகர்கள்
இதை பார்த்த நெட்டிசன்கள் எதற்காக அபிஷேக், திடீரென சிம்புவை போல் குரலை மாற்றி பேசுகிறார். உடல் மொழிகளும் அவ்வப்போது சிம்புவை போலவே நடந்து கொள்ள முயற்சி செய்கிறாரே ஏன். என்ன காரணம் என கேள்வி எழுப்பி உள்ளனர். அபிஷேக்கின் இந்த திடீர் மாற்றத்திற்கு காரணம் புரியாமல் ரசிகர்கள் குழம்பிப் போய் உள்ளனர்.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!