Don't Miss!
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்க தடை போட்ட அரசு.. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மூத்த நடிகர்
மும்பை: கொரோனா அச்சம் காரணமாக 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்கள் நடிக்க தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.
மகாராஷ்ட்ரா அரசு, கொரோனா பரவல் காரணமாக, 65 வயதுக்கு மேற்பட்ட நடிகர்களையும், 10 வயதுக்கு உட்பட்ட நடிகர்களையும் ஷூட்டிங் செய்ய அனுமதிக்கக் கூடாது என்ற தடை உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.
ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக வீட்டிலேயே வறுமையில் வாடி தவிக்கும் சாதாரண மூத்த நடிகர்களின் நிலை, இது போன்ற அறிவிப்பால், மேலும், கேள்விக்குறிக்கு உள்ளாகும் எனக் கூறி, இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் மூத்த நடிகர் பிரமோத் பாண்டே என்பவர், நேற்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
'ஜெயம்' பட ஹீரோவுக்கு நிச்சயதார்த்தம்.. நீண்ட நாள் காதலி ஷாலினியை வெகு விரைவாக மணக்கிறார்!
அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மூத்த கலைஞர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற அரசு என்ன ஏற்பாடு செய்திருக்கிறது என்றும், இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் மகாராஷ்ட்ரா அரசுக்கு, மும்பை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
குழந்தை நட்சத்திரங்கள் கூட, அவர்களுக்கு பெற்றோர்கள் இருப்பார்கள், அதனால், பிழைத்துக் கொள்வார்கள், தன்னை போன்ற வயது முதிர்ந்த கலைஞர்கள், இந்த சினிமாவையே நம்பி இருக்கும் நிலையில், வேலை இல்லாமல் போனால், சாவதை தவிர வேறு வழியில்லை என உருக்கமாக பேட்டியும் கொடுத்துள்ளார்.