இவங்கள்லாம் சினிமா உலகம் நடத்திய போராட்டத்துக்கு வராதவங்க!
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக திரையுலகம் இன்று நடத்திய மௌன அறவழிப் போராட்டத்திலும் நடிகர் அஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவில்லை.
இந்தப் போராட்டத்தில் ரஜினிகாந்த், கமல் ஹாஸன், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முதல் நிலை நடிகர்கள் தொடங்கி, கடை நிலை ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் வரை பலரும் வந்திருந்தனர்.

ஆனால் அஜித், சிம்பு, உதயநிதி, விஷ்ணு, ஆர்யா, சந்தானம், வடிவேல், பிரகாஷ் ராஜ், சரத்குமார், விமல், அதர்வா, விக்ரம் பிரபு, ஜெய், பரத், தினேஷ், ஜீவா, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் பங்கேற்கவே இல்லை. அதேபோல பெரும்பாலான நடிகைகள் இந்தப் போராட்டத்துக்கு வரவே இல்லை. ரேகா, சாய் தன்ஷிகா என மிகச் சிலரே வந்திருந்தனர்.
Comments


Click it and Unblock the Notifications