Don't Miss!
- Lifestyle கோடையில் செல்லப்பிராணிகளை பராமரிப்பது எப்படி ? இதோ டிப்ஸ்..!
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Sports ரோஹித்துக்கு விசுவாசமாக இருந்த வீரரை அணியை விட்டே நீக்கிய ஹர்திக் பாண்டியா? கதறும் ரசிகர்கள்
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்னுடைய தொழில் நடிப்பு மட்டுமே நான் மாற்ற விரும்பவில்லை - மகேஷ் பாபு
சென்னை: எனக்கு தெரிந்த ஒரே வேலை நடிப்பது மட்டும் தான். அதையே நான் முழுமையாக செய்ய விரும்புகிறேன். அதை மாற்ற நான் விரும்பவில்லை என்று நடிகர் மகேஷ் பாபு தெரிவித்துள்ளார். நடிகர் மகேஷ் பாபு அரசியலில் நுழைவதற்கு முடிவு செய்திருக்கிறார் என்ற வதந்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன. ஆனால் அதை அவர் மறுத்துள்ளார்.
தென்னிந்திய சினிமா உலகில் தனக்கென்று அதிக அளவில் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள, அதுவும் அதிக பெண் ரசிகைகளை கொண்டுள்ள ஒரே நடிகர் மகேஷ்பாபு மட்டுமே. தென்னிந்தியா தாண்டி இந்திய அளவில் அதிகம் ரீச் ஆன நடிகர் இவர்தான். தமிழ்நாட்டிலும் இவருடைய டப்பிங் படங்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமும் உண்டு.
மகேஷ் பாபு சிறு வயதிலிருந்தே திரைத்துறையில் நடித்து வருகிறார். இன்று அவர் 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் டோலிவுட்டில் மிக முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர். அவர் நடித்து கடைசியாக வெளிவந்த பாரத் எனே நேனு (பரத் என்னும் நான்) மற்றும் மஹரிஷி என இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
கண் தானம் செய்யுங்க... விழி இழந்தவரின் வாழ்க்கையில் ஒளி ஏற்றலாம் - நடிகர் விக்ரம்
இப்போது அவர் இயக்குநர் அணில் ரவிப்புடி இயக்கும் சரிலேறு நீகேவ்வாறு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஆர்மி மேஜராக நடிக்கிறார். மேலும் அவருடன் ஜோடியா ராஷ்மிகா நடிக்கிறார்.
அவர் சினிமா மற்றும் வாழ்க்கையில் பிஸியாக இருக்கும்போது, மகேஷின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து வதந்திகள் எழுந்துள்ளன. நடிகர் மகேஷ் பாபு அரசியலில் நுழைவதற்கு முடிவு செய்திருக்கிறார் என்ற வதந்திகள் றெக்கை கட்டி பறக்கின்றன.
ஆனால், நடிகர் மகேஷ் பாபுவோ, நான் செய்ய விரும்புவது நடிப்பு மட்டுமே. நான் ஒரு குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது நான் வெகுதூரம் செல்ல வேண்டும் என்று நினைத்தேன், அப்போது நான் செய்ததை, செய்வதை நான் மிகவும் விரும்பினேன்.
நிச்சயமாக, அந்த நாட்களில் என்னுடைய நோக்கங்கள் வேறுபட்டன. பள்ளிக்கு செல்வதை நான் ஒரு வருடம் தவறவிட்டபோது, என்னுடைய அப்பா படிக்கச் சொன்னார். பின்னர் திரும்பி வந்து திரைப்படங்களில் நடிக்க சொன்னார். அதாவது, எனக்குத் தெரிந்த ஒரே விஷயம், நடிப்பு மட்டும் தான். நான் அதை மாற்ற விரும்பவில்லை, என்று அவர் சமீபத்திய பேட்டியில் கூறினார். நடிகர்கள் அரசியலுக்கு வருவது சாதாரணம் தான் அனால் வெற்றி என்பது சிலருக்கு மட்டும் தான் முழுமையாக கிடைக்கும். இதை நன்கு புரிந்தவர் மகேஷ் பாபு.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க