Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
ஆபாச போட்டோக்களை காட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: டிவி நடிகர் கைது
மும்பை: பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தொலைக்காட்சி நடிகர் அபிநவ் கோஹ்லி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் அபிநவ் கோஹ்லி(39). அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக பெண் ஒருவர் மும்பை போலீசில் புகார் அளித்துள்ளார்.
அவர் தன் புகார் மனுவில் கூறியிருப்பதாவது,
அபிநவ் கோஹ்லி மாடல் அழகிகளின் ஆபாச படங்களை செல்போன் மூலம் எனக்கு காட்டினார். கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அவர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததுடன் அசிங்கமாக பேசி வந்தார்.
திருக்கடவூர் அபிராமியின் அழகில் சொக்கிப்போன கவியரசர் - பட்டராக வாழ்ந்த எஸ்.வி.சுப்கையா
மேலும் என்னை அடித்து துன்புறுத்தியுள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அவர் என்னையும், என் அம்மாவையும் மிரட்டியுள்ளார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
அந்த பெண்ணின் அம்மாவும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஞாயிற்றுக்கிழமை இரவு அபிநவ் கோஹ்லியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக அபிநவ் கோஹ்லி தனது மனைவியும், நடிகையுமான ஸ்வேதா திவாரியையும், அவரின் முதல் திருமணம் மூலம் பிறந்த மகளான பாலக்கையும் அடித்து துன்புறுத்தியுள்ளார் என்று புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.