Don't Miss!
- Sports ரியான் பராக் இல்லடா.. இது பேட்ட பராக்.. கடைசி 5 ஓவரில் 77 ரன்கள்.. டெல்லிக்கு ஷாக் கொடுத்த ராஜஸ்தான்
- Automobiles எவ்வளவு பெரிய கிரிக்கெட்டர், குழந்தை போல் ராயல் என்ஃபீல்டு பைக்கில் ரைடு!! ஓட்டி பார்த்த பின் அவர் சொன்னது...
- News பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பில் முதல் அரெஸ்ட்.. முஸம்மில் ஷரீப் என்பவரை கைது செய்த என்ஏஐ
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
தமிழக அரசின் கொரோனா நிதிக்கு ரூ. 25 லட்சம் நிதி வழங்கிய அஜித்.. கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
Recommended Video
தமிழகத்தில் கொரோனா பரவல் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Radhe Spoiler Alert: தர்பார், போக்கிரி, கஜினி மிக்ஸ் பண்ணி அடிச்சா ராதே ரெடி.. அந்த அவுட்லாஸ்?
இதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழக மருத்துவம், நிதி என பெரும் நெருக்கடிகளை சந்தித்துள்ளது.
பொது நிவாரண நிதி
இந்நிலையில் படுக்கைகள், மருந்துகள், ஆக்ஸிஜன் ஆகியவற்றை அதிகரிக்கவும் இந்த திடீர் செலவீனங்களுக்காக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
அஜித் ரூ.25 லட்சம்
இதனை தொடர்ந்து பலரும் தமிழக அரசின் நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசின் கொரோனா நிவாரண நிதிக்காக நடிகர் அஜித் 25 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.
வங்கி பரிவர்த்தனை
வங்கி பரிவர்த்தனை மூலம் முதல்வர் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாயை அனுப்பி வைத்துள்ளார் நடிகர் அஜித். இதனை நடிகர் அஜித்தின் செய்தி தொடர்பாளர் சுரேஷ் சந்திரா டிவிட்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.
ஏஆர் முருகதாஸ்
ஏற்கனவே நடிகர் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் இணைந்து தமிழக அரசின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கியுள்ளனர். இயக்குநர் சிஎஸ் அமுதன் 50 ரூபாயும், இயக்குநர் ஏஆர் முருகதாஸ் 25 லட்சம் ரூபாயும் அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.