twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்துக்கள் எழுதுவது பொறுப்பற்ற செயல் - அஜீத்குமார்

    By Shankar
    |

    Actor Ajith furious on Facebook users
    சென்னை: அரசியல்வாதிகள் சினிமாக்களை எதிர்ப்பது ஆதாயத்துக்காகவே.. இதுபோன்ற போராட்டங்களுக்கு ஊடகங்களும் முக்கியத்துவம் அளிக்கின்றன, என்று கூறியுள்ளார் நடிகர் அஜீத்.

    மேலும் ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்துக்கள் எழுதுவது பொறுப்பற்ற செயல் என்றும் அவர் கூறியுள்ளார்.

    தனது ஒரு படம் முடிந்ததும் மீடியாக்களைச் சந்திப்பது அஜீத் வழக்கம். அதாவது முக்கியமான சில தினசரி மற்றும் பத்திரிகைகளை.

    இப்போது அஜீத்தின் வலை படம் கிட்டத்தட்ட க்ளைமாக்ஸை நெருங்கிவிட்டது. இந்த நிலையில் அஜீத் பேச ஆரம்பித்துள்ளார்.

    சமீபத்தில் அவர் அளித்துள்ள ஒரு பேட்டியிலிருந்து...

    வலை படத்தில் நடித்த போது சில விபத்துக்களை எதிர்கொண்டேன். காரணம் டூப் போடாமல் நடித்ததுதான். இதை நான் மட்டுமே செய்யவில்லை. எனக்கு முன்பும்கூட சிலர் செய்துள்ளனர். அதற்காக டூப் நடிகர்களை குறை சொல்லவில்லை. அவர்களும் மிக முக்கியம்தான்.

    தயாரிப்பாளர்களோ, இயக்குனர்களோ ஆபத்தான காட்சிகளில் எங்களை நடிக்க வைக்க விரும்புவதில்லை. நாங்களாகவே விரும் செய்கிறோம், விபத்தையும் எதிர்நோக்குகிறோம்.

    நான் மரணத்தையே பார்த்து வந்த பின், விபத்து நடக்க வேண்டும் என்று விதி இருந்தால் அதை யாரும் தடுக்க முடியாது.

    எனது படங்களில் புது முகங்களுக்கு நான் வாய்ப்பு கொடுப்பதாகப் பேசுவது சரியல்ல. வாய்ப்பைக் கொடுப்பது கடவுள்தான்.

    வில்லன்கள் பிரச்சினை

    இப்போதெல்லாம் வில்லனாக யாரையும் காட்ட முடிவதில்லை. வில்லன் எந்த சாதியையோ, மதத்தையோ சார்ந்தவராக இருப்பதுபோல் காட்டினால் சண்டைக்கு வருகிறார்கள். வக்கீல், டாக்டர் போன்ற கேரக்டர்களைக் கூட வில்லன்களாக காட்ட முடியவில்லை.

    புதுப் புது கட்சிகள் தோன்றுவதே இதற்கோல்லாம் காரணம். அரசியல் ஆதாயத்துக்காகவே எதிர்க்கின்றனர். இதுபோன்ற போராட்டங்களுக்கு ஊடகங்களும் முக்கியத்துவம் அளிக்கின்றன.

    அடிப்படையில் தேசத்தில் ஒழுக்கம் குறைந்துவிட்டது. நல்ல தலைவர்கள் வேண்டும் என்கிறோம். அது போல் மக்களுக்கும் நல்ல ஒழுக்கம் வேண்டும். தலைவர்களிடம் எதிர்ப்பார்க்கும் ஒழுக்கத்தை மக்களும் கடைப்பிடிக்க வேண்டும்.

    ரசிகர்கள் ஃபேஸ்புக்கில் அவதூறு கருத்துக்கள் வெளியிடுவது பொறுப்பான செயல் அல்ல. நல்ல விதமாக வளர்க்கப்பட்ட குடிமக்கள் இது போன்ற கருத்துக்களை போடமாட்டார்கள்," என்றார் அஜீத் குமார்.

    English summary
    Actor Ajith Kumar says says that posting controversial status in FB is irresponsible activity.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X