Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
கொரோனாவால் திரும்ப முடியவில்லை... கனடாவில் இருக்கும் மகன் பற்றி விஜய்யிடம் நலம் விசாரித்த அஜித்!
சென்னை: கனடாவில் தங்கியுள்ள நடிகர் விஜய்யின் மகன் பற்றி, நடிகர் அஜித் நலம் விசாரித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.
Recommended Video
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய். இவர், சினிமா தொடர்பான படிப்புக்காக கனடா நாட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு அவர் படித்து வருகிறார்.
அமெரிக்கா செல்ல முடியவில்லை.. லாக்டவுன் காரணமாக இந்தியாவில் தங்கியிருந்த பிரபல நடிகர் திடீர் மரணம்!
ஊரடங்கு
இதற்கிடையே, கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவியது. குறிப்பாக இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. அங்கு ஏராளமானோர் தினமும் உயிரிழக்கின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகள் ஊரடங்கை பிறப்பித்துள்ளது.
விமான போக்குவரத்து
போக்குவரத்துகள் முடக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சர்வதேச விமான போக்குவரத்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வெளிநாட்டில் சிக்கியுள்ள பலர், தங்கள் சொந்த நாட்டுக்கு வரமுடியாமல் தவித்து வருகின்றனர். படிப்புக்காக வெளிநாடு சென்றவர்களும் தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலேயே பாதுகாப்பாக வசித்து வருகின்றனர்.
விஜய் மகன் சஞ்சய்
இந்நிலையில் நடிகர் விஜய், தனது மகன் குறித்து கவலை அடைந்ததாகவும் இதனால் அவர் வருத்தத்தில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில், அவர் தரப்பில் இதை மறுத்திருந்தனர். சஞ்சய், பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் நடிகர் விஜய், அவரிடம் தினமும் போனில் பேசி வருவதாகவும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருவதாகவும் கூறப்பட்டது.
விசாரித்த அஜித்
இந்த தகவல் பரவியதும் இதுபற்றி அறிந்த அஜித், நடிகர் விஜய்யிடம் போனில் விசாரித்துள்ளார். சஞ்சய்யின் நலம் குறித்தும் கனடாவில் தற்போது இருக்கும் சூழல் பற்றியும் அவர் விசாரித்ததாகவும் அதற்கு விஜய் பதிலளித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்யும் அஜித்தும் நேரம் கிடைக்கும்போது போனில் பேசிக்கொள்வது சஜகமான ஒன்றுதான் என்று அவருக்கு நெருங்கியவர்கள் தெரிவித்தனர்.