Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
கும்பகோணத்தில் 'ஜீ' பட ஷுட்டிங்கை திடீரென நிறுத்திய அஜித்.. 16 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியான தகவல்!
சென்னை: நடிகர் அஜித் தனது ஜீ பட ஷுட்டிங் கும்பகோணத்தில் நடைபெற்ற போது அதனை திடீரென நிறுத்திவிட்டு பேக் அப் செய்த தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
நடிகர் அஜித் மற்றும் நடிகை த்ரிஷா ஆகியோர் இணைந்து நடித்தப் படம் ஜீ. இந்தப் படத்தை ரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தில் நித்தின் சத்யா, வெங்கட் பிரபு, பிரபாகரன் உள்ளிட்டோர் அஜித்தின் நண்பர்களாக நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியானது.
100 அடி கட்அவுட் 10 உயிரையாவது பலி கேட்காதா? பாகுபலியை வச்சுசெய்த பிஸ்கோத்.. மிரளவிடும் ட்ரெயிலர்!
ஷுட்டிங்கை நிறுத்திய அஜித்
இந்நிலையில் இந்தப் படத்தின் ஷுட்டிங் கும்பகோணத்தில் நடைபெற்ற போது அதனை நடிகர் அஜித் திடீரென நிறுத்திவிட்டு பேக் அப் செய்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜீ படத்தின் ஷுட்டிங் கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணம் பகுதியில் நடைபெற்றது.
கும்பகோணம் தீ விபத்து
அப்போதுதான் உலகத்தையே உலுக்கிய அந்த துயர சம்பவம் நடந்தது. கடந்த 2004ஆம் ஆண்டு கும்பகோணத்தில் ஜீ படத்தின் ஷுட்டிங் நடைபெற்ற போதுதான் அங்கு இயங்கி வந்த தனியார் பள்ளியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர்.
பெரும் மன உளைச்சல்
அப்போது படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித், இந்த செய்தியை அறிந்த உடனேயே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு விபத்து நடந்த இடத்திற்குச் சென்றுள்ளார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானார். பின்னர் அந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் படப்பிடிப்பை நிறுத்தியுள்ளார்.
கும்பகோணத்தில் நடக்கவில்லை
மேலும் மீண்டும் சென்னைக்கு செல்லுமாறு தயாரிப்பாளர்களிடம் அஜித் கேட்டுக்கொண்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதன் பிறகு அந்த படத்தின் ஷுட்டிங் கும்பகோணத்தில் நடைபெறவில்லை என்பதும் கோயம்புத்தூர் உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்றதும் தெரிய வந்துள்ளது.
அஜித் உதவி
சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நேர்காணலில், இயக்குனர் லிங்குசாமி இந்த சம்பவம் பற்றி பேசியிருந்தார். அந்த பள்ளியில் நிகழ்ந்த பயங்கரமான தீ விபத்து பற்றி கேள்விப்பட்டவுடன் விபத்து நடந்த இடத்திற்கு அஜித் சென்றுவிட்டதாகவும் கூறினார். நடிகர் அஜித் வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் மீட்புக் குழுவுக்கு உதவினார் என்றும் கூறினார்.
கோடையில் ரிலீஸ்
தற்போது நடிகர் அஜித் ஹெச் வினோத் இயக்கும் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர் ரசிகர்கள். இப்படத்தில் ஹுமா குரேஷி லீடிங் ரோலில் நடிக்கிறார். இந்த படம் தீபாவளியின் போது இந்த ஆண்டு வெளியிடப்படவிருந்தது. ஆனால் கொரோனா காரணமாக இந்த படம் அடுத்த வருடம் கோடைக் காலத்தில் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.