Don't Miss!
- News அரசியல் வாழ்க்கையே ஓவர்? தாமரையை நம்பி போய் சேற்றில் சிக்கிட்டாரே.. இளம் தலைக்கு பாஜக வைத்த ஆப்பு
- Finance என்னப்பா டிரம்ப்.. பேசுறது ஒன்னு செய்யுறது ஒன்னா.. ட்ரூத் சோசியல் நிறுவனம் செய்த வேலைய பாருங்க..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Lifestyle சாணக்கிய நீதி படி திருமணமான ஆண்கள் இந்த தவறுகளை ஒருபோதும் பண்ணக்கூடாதாம்... இல்லனா அவங்க வாழ்க்கை அவ்வளவுதான்!
- Sports சுற்றி சிஎஸ்கே ரசிகர்கள்.. நடுவில் ஒற்றை ஆளாய் போட்ட ஆட்டம்.. சேப்பாக்கத்தில் லக்னோ ரசிகர் சம்பவம்!
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அஜித் கொடுத்த ஆல்பம்... அசந்துபோன நயன்தாரா!
நடிகை நயன்தாராவுக்கு நடிகர் அஜித் போட்டோ ஆல்பம் ஒன்றை பரிசளித்து அசத்தியுள்ளார்.
Recommended Video
சென்னை: விசுவாசம் படப்பிடிப்பின் போது நடிகை நயன்தாராவை போட்டோ எடுத்து, அதை ஆல்பமாக்கி பரிசளித்துள்ளார் நடிகர் அஜித்.
அஜித், நயன்தாரா நடித்து வரும் படம் விசுவாசம். சிறுத்தை சிவா தொடர்ந்து 4வது முறையாக அஜித்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது.
பைக், கார் ரேஸ் பிரியரான அஜித், அதற்கடுத்தபடியாக ஆளில்லா குட்டி விமானங்களை இயக்குவதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவரது சமீபத்திய ஆர்வம் புகைப்படக் கலை பக்கம் திரும்பி இருக்கிறது.
எப்போதும் கையில் கேமராவுடன் வலம் வரும் அஜித், படப்பிடிப்பு இடைவேளையில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர், நடிகைகளை புகைப்படம் எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி, சமீபத்தில் நயன்தாராவுக்கு அவர் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.
ஐதராபாத்தில் நடைபெற்ற விசுவாசம் படப்பிடிப்பின் போது, நயன்தாராவை விதவிதமாக ஸ்டில் எடுத்த அஜித், அதை ஆல்பமாக பிரின்ட் போட்டு, நயன்தாராவுக்கு பரிசாக வழங்கினார். இதனால், அசந்துபோன நயன்தாரா, அஜித்தை நினைத்து நெகிழ்ந்து போனதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக நடிகர் அப்புக்குட்டியையும் இதேபோல் விதவிதமான கெட்டப்பில் புகைப்படம் எடுத்து அஜித் பரிசளித்தது நினைவுக்கூரத்தக்கது.