Don't Miss!
- News தலைகீழாக திரும்புதே.. விவசாயிகளுக்கு குஷி.. இனி "ஸ்பாட் ஆக்ஷன்".. தமிழக அரசின் புது அதிரடி வருகிறது
- Technology Airtel அதிரடி.. இலவச ரௌட்டர்.. செட் டாப் பாக்ஸ்.. அன்லிமிடெட் டேட்டா.. 300 கேபிள் டிவி சேனல்.. 15 OTT சந்தா..
- Automobiles ஃபார்ச்சூனர் கார் என்றாலே நம்ம மக்களுக்கு தனி பிரியம்!! விலை அதிகமா இருந்தாலும் ஷோரூமுக்கு படை எடுக்குறாங்க!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
2 ஆட்டோ டிரைவர்களை அடித்து நொறுக்கிய சூர்யா, விஜய் சேதுபதி பட வில்லன்
Recommended Video
மும்பை: இரண்டு ஆட்டோ டிரைவர்களை தாக்கியது தொடர்பாக நடிகர் ஆகாஷ்தீப் சைகல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் ஆகாஷ்தீப் சைகல். டிவி ரியாலிட்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு வருகிறார். சல்மான் கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
சூர்யாவின் அயன், விஜய் சேதுபதியின் கவண் படங்களில் நடித்துள்ளார் ஆகாஷ்தீப்.
ஆகாஷ்
மும்பையில் வசித்து வரும் அவர் பந்த்ரா பகுதியில் 38வது தெருவை ஒன்வே ஆக்குமாறு கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஒன்வே
டிராபிக்கால் அப்பகுதி மக்களுக்கு தொல்லையாக இருப்பதால் ஒன்வே ஆக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அந்த பாதையை ஒன்வே ஆக்க போக்குவரத்து போலீசார் டிவைடர் வைத்துள்ளனர். இருப்பினும் ஆட்டோ டிரைவர்கள் மறுபக்கமாக வந்து அந்த பாதைய டூ வே ஆக்கியுள்ளனர்.
வாக்குவாதம்
செவ்வாய்க்கிழமை அந்த வழியாக வந்த 2 ஆட்டோ டிரைவர்களுக்கும், சைகல் உள்ளிட்டோருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சைகல் மற்றும் சிலர் சேர்ந்து 2 ஆட்டோ டிரைவர்களை தாக்கியுள்ளனர்.
வழக்கு
சைகல் உள்ளிட்டோர் தாக்கியதில் ஒரு ஆட்டோ டிரைவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சைகலை விசாரணைக்கு வருமாறு உத்தரவிட்டுள்ளனர்.