Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நடிகர் அலெக்ஸ் உடல் திருச்சியில் அடக்கம் செய்யப்பட்டது
திருச்சியைச் சேர்ந்தவரான அலெக்ஸ், ரயில்வேயில் பணியாற்றியவர். மேஜிக் கலையில் நிபுணரான அவர் பின்னர் சினிமாவில் நுழைந்து பிரபலமானார். சினிமாவில் நடித்துக் கொண்டே, மேஜிக் கலையையும் தொடர்ந்து செய்து வந்தார்.
52 வயதான அலெக்ஸ், ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான வள்ளி படத்தின் மூலம் நடிகரானவர். காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு விதமான பாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தார்.
தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் செய்து சாதனையும் படைத்துள்ளார். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அலெக்ஸ் மே 1ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
அவரது உடல் திருச்சிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு பல்துறைப் பிரமுகர்கள், திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து அவரது வீட்டிலிருந்து நேற்று மாலை இறுதி ஊர்வலம் கிளம்பியது. இதில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆற்றுப்பாக்கம் அந்தோணியார் கோவிலில் உடல் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.
அதன் பின்னர் உடலை மேலப்புதூர் வேர்ஹவுஸ் அருகில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.