twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நடிகர் அலெக்ஸ் உடல் திருச்சியில் அடக்கம் செய்யப்பட்டது

    By Sudha
    |

    Alex
    மறைந்த நடிகர் அலெக்ஸின் உடல் திருச்சியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    திருச்சியைச் சேர்ந்தவரான அலெக்ஸ், ரயில்வேயில் பணியாற்றியவர். மேஜிக் கலையில் நிபுணரான அவர் பின்னர் சினிமாவில் நுழைந்து பிரபலமானார். சினிமாவில் நடித்துக் கொண்டே, மேஜிக் கலையையும் தொடர்ந்து செய்து வந்தார்.

    52 வயதான அலெக்ஸ், ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான வள்ளி படத்தின் மூலம் நடிகரானவர். காமெடி, குணச்சித்திரம், வில்லன் என பல்வேறு விதமான பாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தார்.

    தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் செய்து சாதனையும் படைத்துள்ளார். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அலெக்ஸ் மே 1ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.

    அவரது உடல் திருச்சிக்குக் கொண்டு வரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு பல்துறைப் பிரமுகர்கள், திமுக, அதிமுகவைச் சேர்ந்த எம்.பி, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

    இதையடுத்து அவரது வீட்டிலிருந்து நேற்று மாலை இறுதி ஊர்வலம் கிளம்பியது. இதில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். பின்னர் ஆற்றுப்பாக்கம் அந்தோணியார் கோவிலில் உடல் வைக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது.

    அதன் பின்னர் உடலை மேலப்புதூர் வேர்ஹவுஸ் அருகில் உள்ள கல்லறைத் தோட்டத்திற்கு எடுத்துச் சென்று நல்லடக்கம் செய்தனர்.

    English summary
    Actor Alex's body buried in Trichy. He was dead on May 1 after a brief ill. He debuted as an actor through Rajinikanth's Valli. Nearly 15,000 people attended the funerals.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X