எம்மாடியோவ்.. இத்தனை கோடிகளா.. சொந்தமாக கேரவன் வாங்கிய முன்னணி நடிகர்.. பால்கன் என பெயராம்!
ஹைதராபாத்: நடிகர் அல்லு அர்ஜூன் சொந்தமாக கேரவன் ஒன்றை வாங்கியுள்ளார்.
ஷுட்டிங்கின் போது மேக்கப் போடுவதற்கும் நடிகர், நடிகைகள் ஓய்வு எடுப்பதற்கும், உடை மாற்றுவதற்கும் கேரவன்கள் பயன்படுத்தப்படுகின்றன. நடிகர் நடிகைகளின் வசதிக்காக தயாரிப்பாளர்கள் கேரவன்களை வாடகைக்கு கொண்டு வருகிறார்கள்.
கேரவன்களின் வாடகை மட்டுமே படம் முடிவதற்குள் லட்சங்களில் கொண்டு போய் நிற்கிறது. பல நடிகர்கள் சொந்தமாக கேரவன் வைத்துள்ளனர்.

இந்நிலையில் தெலுங்கில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் சொந்தமாக கேரவன் ஒன்றை வாங்கியுள்ளார். 7 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு சொகுசு வசதிகளுடன் கேரவனை வாங்கியுள்ளார் அல்லு அர்ஜுன்.
மும்பையில் உள்ள ஒரு கம்பெனி மூலம் இதனை வடிவமைத்து இருக்கிறார். அதற்கு பால்கன் என்று பெயர் வைத்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அல்லு அர்ஜுன், ரசிகர்களின் அன்பினால் மட்டுமே இது சாத்தியமாகிறது என்றார். அண்மையில் நடிகர் மகேஷ் பாபு சொந்தமாக கேரவன் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











