Don't Miss!
- Sports பும்ராவுக்கே அதிர்ச்சி கொடுத்த அஷுதோஷ் சர்மா.. போட்டியை வென்ற மும்பை.. ரசிகர்களை வென்ற பஞ்சாப்!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- News ஆம்ஆத்மிக்கு அடுத்த ஷாக்.. கெஜ்ரிவாலை தொடர்ந்து டெல்லி எம்எல்ஏ அமலாக்கத்துறையால் கைது
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Automobiles படகு மாதிரி மிதந்து சென்ற ரூ2.44 கோடி கார்! இவ்வளவு வெள்ளத்துலயும் சின்ன டேமேஜ் கூட ஆகலயே!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
செல்ல நாயுடன் செம கூலாக போஸ்…ரெண்டும் ஒரே மாதிரி தான் இருக்கு!
சென்னை : எதையும் துணிச்சலுடன் பேசக்கூடிய நடிகை ஆண்ட்ரியா திரைப்படங்களிலும் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.
விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா அதைத்தொடர்ந்து கா, நோ என்ட்ரி என நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா நயன்தாராவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய நிலையில் இப்பொழுது செல்ல நாயுடன் அழகில் போட்டிபோடும் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் வைரலாகி வருகிறார்.
நடிப்பில் மிரட்டி
சினிமாவிற்கு பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா இப்பொழுது வெற்றிகரமான நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் நடித்துவரும் திரைப்படங்களும் தனித்துவமானதாக ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை திரைப்படத்தில் சரோஜா கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டி இருந்த ஆண்ட்ரியாவை இன்று வரை சென்றாலும் பலரும் ராஜன் பொண்டாட்டி டா என கூறி வருவது அந்த கதாபாத்திரத்தின் தாக்கத்தை பிரதி பலிக்கிறது
நயன்தாராவை பற்றி பேசியது
வட சென்னை போலவே தரமணி, ஆயிரத்தில் ஒருவன் என நடிப்பில் பல அவதாரங்களை எடுத்து சினிமாவில் தொடர்ந்து ஜொலித்து வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாராவை பற்றி பேசியது இப்பொழுது மிகப்பெரிய சர்ச்சையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நயன்தாராவும் நடித்து
சினிமாவில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்றால் அதற்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் அவரை அடையாளம் கண்டு கொள்வார்கள். அதுபோலதான் நடிகை நயன்தாராவும் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் திரைப்படங்களில் நடித்து இப்பொழுது முன்னணி நடிகையாக உள்ளார். ஆனால் நான் இந்த மாதிரி நடிக்கவில்லை சிறந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.
கூலாக கூலிங் கிளாஸ்
நயன்தாராவை பற்றிய சர்ச்சைக்குரிய பேச்சு இப்பொழுது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறிவரும் நிலையில் ஆண்ட்ரியா தனது செல்ல நாயுடன் செம கூலாக கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு இருவரும் பார்க்க ஒரே மாதிரி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு எங்கள் இருவரில் யார் அழகாக கூலிங் கிளாஸ் அணிந்துள்ளார்கள் என கேட்டுள்ள இந்த கியூட் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.