Don't Miss!
- News ஜெய் ஸ்ரீராம் போலோ.. "பிஸ்னஸ் மேன்" கையை தூக்கிய கேப்பில்! ரூ.36000 அபேஸ்! பாஜக பிரச்சாரத்தில் திக்
- Lifestyle எச்சரிக்கை! எக்காரணம் கொண்டும் இந்த 5 அறிகுறிகளை புறக்கணிக்காதீங்க.. ரொம்ப அவதிப்படுவீங்க..
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
செல்ல நாயுடன் செம கூலாக போஸ்…ரெண்டும் ஒரே மாதிரி தான் இருக்கு!
சென்னை : எதையும் துணிச்சலுடன் பேசக்கூடிய நடிகை ஆண்ட்ரியா திரைப்படங்களிலும் துணிச்சலான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து ரசிகர்களின் பாராட்டை பெற்று வருகிறார்.
விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆண்ட்ரியா அதைத்தொடர்ந்து கா, நோ என்ட்ரி என நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஆண்ட்ரியா நயன்தாராவை பற்றி பேசி சர்ச்சையில் சிக்கிய நிலையில் இப்பொழுது செல்ல நாயுடன் அழகில் போட்டிபோடும் புகைப்படத்தை வெளியிட்டு மீண்டும் வைரலாகி வருகிறார்.
நடிப்பில் மிரட்டி
சினிமாவிற்கு பாடகியாக அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா இப்பொழுது வெற்றிகரமான நடிகையாகவும் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் நடித்துவரும் திரைப்படங்களும் தனித்துவமானதாக ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான வடசென்னை திரைப்படத்தில் சரோஜா கதாபாத்திரத்தில் நடிப்பில் மிரட்டி இருந்த ஆண்ட்ரியாவை இன்று வரை சென்றாலும் பலரும் ராஜன் பொண்டாட்டி டா என கூறி வருவது அந்த கதாபாத்திரத்தின் தாக்கத்தை பிரதி பலிக்கிறது
நயன்தாராவை பற்றி பேசியது
வட சென்னை போலவே தரமணி, ஆயிரத்தில் ஒருவன் என நடிப்பில் பல அவதாரங்களை எடுத்து சினிமாவில் தொடர்ந்து ஜொலித்து வரும் ஆண்ட்ரியா சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நயன்தாராவை பற்றி பேசியது இப்பொழுது மிகப்பெரிய சர்ச்சையாக விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நயன்தாராவும் நடித்து
சினிமாவில் முன்னணி நடிகையாக வரவேண்டும் என்றால் அதற்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து இருக்க வேண்டும். அப்போது தான் மக்கள் அவரை அடையாளம் கண்டு கொள்வார்கள். அதுபோலதான் நடிகை நயன்தாராவும் ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோரின் திரைப்படங்களில் நடித்து இப்பொழுது முன்னணி நடிகையாக உள்ளார். ஆனால் நான் இந்த மாதிரி நடிக்கவில்லை சிறந்த கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறேன்.
கூலாக கூலிங் கிளாஸ்
நயன்தாராவை பற்றிய சர்ச்சைக்குரிய பேச்சு இப்பொழுது சமூக வலைத்தளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறிவரும் நிலையில் ஆண்ட்ரியா தனது செல்ல நாயுடன் செம கூலாக கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு இருவரும் பார்க்க ஒரே மாதிரி லுக்கில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு எங்கள் இருவரில் யார் அழகாக கூலிங் கிளாஸ் அணிந்துள்ளார்கள் என கேட்டுள்ள இந்த கியூட் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.