Don't Miss!
- Lifestyle உங்க தலையணை இந்த மாதிரி இருந்தா நீங்க தலைவலி முதல் பல ஆபத்தான பிரச்சினைகள் வரை சந்திக்க வேண்டியிருக்குமாம்...!
- News திருமாவளவன், சீமானுக்கு பலமுறை தூது விட்டாராமே எடப்பாடி.. கூட்டணி பற்றி உடைத்துப் பேசிய அன்புமணி!
- Finance 2047ல் இந்தியா வளர்ந்த நாடாக மாறுமா? அதைப் பற்றி பேசுவதுகூட முட்டாள்தனம் - ரகுராம் ராஜன்
- Automobiles 6ம் மாசத்துக்கு அப்புறம் எப்பே வேணும்னாலும் இந்த காரை இந்தியாவில் எதிர்பார்க்கலாம்! சிட்ரோன் பசால்டு வெளியீடு!
- Sports வெறும் 10 ரூபாயில் சிஎஸ்கே ஆடும் போட்டிகளை நேரில் காணும் அரிய வாய்ப்பு.. ஆனா ஒரு ட்விஸ்ட்
- Education ஜேஇஇ பிரதானத் தேர்வெழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி
- Technology கட்டண உயர்வு.. தூக்கி வாரிய வோடபோன்.. ரூ.202 ரீசார்ஜ்.. 13 ஓடிடி.. 400 சேனல்கள்.. டிவி டூ மொபைல்.. என்ன வருது!
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
காரை மோதி இன்ஸ்பெக்டரை படுகாயப்படுத்திய நடிகர் சுரேஷ் கைது
சென்னை ஈவேரா சாலையில், கீழ்ப்பாக்கம் பகுதியில் ஒரு கார் இன்று காலை 8 மணியளவில் வேகமாக வந்தது. அப்போது திடீரென அது தாறுமாறாக ஓடி சாலையில் போய்க் கொண்டிருந்த ஒரு பைக்கில் மோதியது. இதில் பைக்கை ஓட்டிச் சென்ற இன்ஸ்பெக்டர் ஆனந்தன் கீழே தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவருடன் அமர்ந்து வந்த நண்பர் கோவர்த்தனும் காயமடைந்தார்.
பைக்கில் மோதி விபத்துக்குள்ளான கார் சாலையில் போய்க் கொண்டிருந்த இரண்டு ஆட்டோக்கள் மீதும் மோதியது. இதில் ஆட்டோ டிரைவர்கள் பிரபுதாஸ், முனிவேலு ஆகியோர் காயமடைந்தனர்.
இதனால் சாலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் விரைந்து வந்தனர். காரை ஓட்டி வந்தவரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் நடிகர் சுரேஷ் என்பதும், தேனி மாவட்டம் என்ற படத்தில் நடித்துள்ளார் என்றும் தெரிய வந்தது. அவர் சில டிவி தொடர்களிலும் நடித்து வருகிறாராம்.
சுரேஷைக் கைது செய்த போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.