Don't Miss!
- News 3 உயிரை பறித்த சென்னை மதுபான விடுதி.. விபத்து நடந்தது எப்படி? ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறிய ஷாக் தகவல்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
விஜய் சேதுபதி அடிவாங்குற வில்லன் இல்ல..ஹீரோக்கே டஃப் தரும் வில்லன்.. அருண் அலெக்ஸாண்டர் !
சென்னை : நடிகர் மற்றும் டப்பிங் ஆர்டிஸ்ட்டான அருண் அலெக்ஸாண்டர், விஜய் சேதுபதி பற்றிய பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து உள்ளார்.
Recommended Video
நடிகர் அருண் அலெக்ஸாண்டர் மாநகரம் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல முக்கிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது மாஸ்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
மாஸ்டர் படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள அருண் அலெக்ஸாண்டர் . சேதுபதியின் கதாபாத்திரம் மாஸ்டர் படத்தில் மற்ற படத்தில் அடிவாங்கும் வில்லன்களை போல இல்லாமல் ஹீரோ விஜய்க்கே டஃப் கொடுக்கும் கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. அதை நீங்கள் திரையில் காண்பீர்கள் என்று கூறியுள்ளார் .
மேலும் சேதுபதி தற்போது பெரிய நடிகராக மாறிவிட்டார் இருந்தும் அவரது ரசிகர்கள் அவரை ஒரு ஹீரோவாக பார்க்கவில்லை ஒரு நடிகராக தான் பார்கிறார்கள். ஏனெனில் மற்ற பெரிய நடிகர்களின் ரசிகர்கள் திரையில் தங்கள் ஹீரோ அடி வாங்கினால் அலறி விடுவார்கள் அப்படியான விஷயங்கள் ஏதும் விஜய் சேதுபதி படங்களுக்கு இருக்காது என்று அருண் கூறியுள்ளார்.
மேலும் கைதி படம் என்னை பெரிய இடத்திற்கு எடுத்து சென்றது அதற்கு லோகேஷ்க்கு தான் நன்றி சொல்ல வேண்டும் என்றும் ' லோகேஷ் என்னை எப்போதும் கைவிடமாட்டாப்புள என்றும் கூறியுள்ளார். ஏனெனில் மாநகரம் படத்திற்கு பின் அருண் வாய்ப்புகள் இல்லை என்று வருத்தபட்டதாகவும் அப்போது லோகேஷ் நான் கட்டாயம் ஒரு பத்து படம் பண்ணுவேன் நீங்க ஒரு பத்து படம் நடிப்பீங்க என்று உறுதியளித்து நம்பிக்கை தந்தார் என்று மகிழ்ச்சியாக கூறினார் அருண்
மேலும் மாஸ்டர் படப்பிடிப்பின் போது கைதி படம் பார்த்த விஜய் தன்னை அதிகபடியாக பாராட்டியதாகவும் மேலும் மற்ற பெரிய நடிகர்கள் பாராட்டியதை விட விஜய் பாராட்டியது கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் என்றும் கூறினார்.
படத்தில் நிறைய ஆச்சரியங்கள் காத்து கொண்டிருப்பதாக அருண் கூறினார். ஏனெனில் பல விஷயங்கள் இப்படி நாங்கள் கேள்விப்படுகிறோம் என்று ஊடக நண்பர்கள் என்னை சந்திக்கும் போது கேட்கிறார்கள் ஆனால் அது அவர்கள் கேட்கும்போது தான் எனக்கே இப்படி படத்தில் இருக்கிறதா என்று ஆச்சரியம் அளிக்கிறது. இதனால் மொத்த படத்தில் பல ஆச்சரியங்களை லோகேஷ் தருவார் என்று அருண் அலெக்ஸாண்டர் உறுதியளித்துள்ளார்.