Don't Miss!
- News 11 மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்த பெண்.. கணவனின் முட்டாள்தனமான செயலால்.. பெரும் சோகம்
- Lifestyle 3 குழந்தைகளின் தந்தை விவாகரத்து கேட்டு நீதிமன்றத்துக்கு ஓடிய வினோதம்... காரணத்தை கேட்டு மயக்கம் போட்ட நீதிபதி!
- Sports இவ்ளோ திறமையா? ரோஹித்தை வியக்க வைத்த இளம் வீரர்.. இதை மட்டும் செய்தால் டி20 அணியிலும் இடம் உறுதி
- Automobiles 10,000கிமீ கடந்து குமரி வந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.. நம்பி வாங்கலாம் போலிருக்கே! இதோட விலை எவ்வளவாக இருக்கும்?
- Finance அட இன்போசிஸ் கூடவா.. ஐடி நிறுவனங்கள் தேர்தல் பத்திரம் வாயிலாக நன்கொடை..!
- Technology WhatsApp-ல ஸ்டேட்டஸ் போடுறீங்களா? வருது புது அப்டேட்.. டபுள் சந்தோஷத்தில் பயனர்கள்.. என்ன மேட்டர் தெரியுமா?
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ளாத எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
அருண்விஜயின் “மாஃபியா“.. 21ந்தேதி வெளியாகும்.. இயக்குனர் நம்பிக்கை!
சென்னை : மாஃபியா திரைப்படம் வரும் 21ந்தேதி திரைக்கு வரும் என்று இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார்.
நடிகர் அருண்விஜய் மற்றும் பிரசன்னா வில்லனாக நடித்திருக்கும் படம் தான் மாஃபியா. இந்த படத்தை துருவங்கள் பதினாறு இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி இருக்கிறார். மேலும் இந்த படத்தை பிரபல தயாரிப்பாளரான சுபாஸ்கரன் தயாரித்து இருக்கிறார்.
கார்த்திக் நரேன் இயக்கியுள்ள மாஃபியா படம் முடியும் தருவாயில் உள்ளது. வரும் பிப்ரவரி 21-ம் தேதி படம் வெளியாகும் என படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்புகள் மற்றும் நேர்காணல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அன்புச்செழியன் வீட்டில் 4 நாட்களாக நடந்த ஐடி ரெய்டு நிறைவு: மூட்டை மூட்டையாக பணம், ஆவணங்கள் பறிமுதல்
இதில் அனைத்து இடங்களிலும் இயக்குனர் கார்த்திக் நரேனை பார்த்து கேட்கப்படும் முதல் கேள்வி நரகாசூரன் படம் ஏன் தாமதமாகிறது, எப்போது படம் வெளியாகும் என்பது தான். இதற்கும் கார்த்திக் நரேன் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியான பதில்களையே கொடுத்து வருகிறார். படம் 2018லே முடிவடைந்து விட்டது இருந்தும் தயாரிப்பில் ஏற்பட்ட பிரச்சனைகள் தான் இன்னும் படத்தை தாமதப்படுத்தி வருகிறது.
கார்த்திக் நரேன் சினிமாவில் பின்புலம் இன்றி தனது முதல் படத்தின் மூலமாக மாபெரும் வெற்றியை சந்தித்தவர். இதனாலே இவரின் இரண்டாவது படமான நரகாசூரன் மிக பெரிய எதிர்பார்பை ஏற்படுத்தியது. மேலும் அந்த படத்தை கௌதம் மேனன் தயாரிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு மிக பெரிய விருந்தாக அமைந்திருந்தது. இதை தாண்டி அதில் நடித்த நடிகர்கள் என ஏகப்பட்ட எதிர்பார்ப்பில் இருந்த படம் வெளியாகாமல் போனது ரசிகர்களுக்கு மிக பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.
பிரசன்னா இந்த படத்தில் வில்லனாக நடித்து இருக்கிறார். இதற்கு முன் பிரசன்னா மிஷ்கினின் அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த படம் மாதிரி இல்லாமல் இந்த படத்தில் மிகவும் வித்தியாசமான முகபாவங்களை கொடுக்கும் வில்லனாக பிரசன்னா நடித்திருக்கிறார் என இயக்குனர் கார்த்திக் நரேன் தெரிவித்து இருக்கிறார் .
மாஃபியா படத்தில் முதல்முறையாக போலீஸாக நடித்து இருக்கிறார் ப்ரியா பவானி சங்கர், இந்த படத்தில் இவர்களுடன் பல முக்கிய நட்சத்திரங்களும் நடித்து உள்ளனர். படம் வரும் பிப்ரவரி 21-ம் தேதி வெளியாக உள்ளது. தொடர் வெற்றிகளுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அருண்விஜய்க்கு இந்த படம் பெரிய வெற்றியை பெற்று தரும் என நம்பப்படுகிறது.