Don't Miss!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
நடிகர் சங்கத் தேர்தல்: நாசர், விஷால், கார்த்தி மகத்தான வெற்றி பாண்டவர் அணிக்கு கிடைத்த வாக்கு விவரம்
சென்னை : நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளராக விஷால் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்த 138 ஓட்டு எப்படி வந்தது...விஷால் அணி ஏன் கேள்வி கேட்கல...சந்தேகத்தை கிளப்பிய பிசாந்த்
நடிகர் சங்கத் தேர்தல்
தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.
வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது
இதையடுத்து, 3 ஆண்டுகளுக்கு இன்று காலை 8 மணி முதல் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணப்பட்ட. காலை வாக்குப்பதிவு தொடங்கும் போதே வாக்கு எண்ணிக்கையில் அதிக வித்தியாசம் இருப்பதாக கூறி பாக்யராஜ் அணியினர் வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்டது. சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
விஷால், கார்த்தி வெற்றி
இதையடுத்து, தற்போது நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. இதில், நாசர் தலைமையிலான விஷால், கார்த்தி அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1720 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐசரி கணேஷ்1032 வாக்குகளை பெற்றுள்ளார். பாண்டவர் அணி சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் 1612 வாக்குகளும், கருணாஸ் 1605, நாசர் 1701 வாக்குகளும், பாக்யராஜ் 1054 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
குவியும் வாழ்த்து
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்க இருக்கும் நிர்வாகிகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பாராட்டுக்ளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. மேலும், பல பிரபலங்களும் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.