Don't Miss!
- News அப்பாடா..ஒரு வழியா முடிஞ்சது! ரிலாக்ஸ் ஆகும் தலைவர்கள்! அடுத்து ’இந்த’ ப்ளான் தான்! இனி ரொம்ப பிசி.!
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Technology ஆர்டருக்கு மேல ஆர்டர்.. ரூ.9000 பட்ஜெட்ல 12GB ரேம்.. 50MP கேமரா.. 33W சார்ஜிங்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகர் சங்கத் தேர்தல்: நாசர், விஷால், கார்த்தி மகத்தான வெற்றி பாண்டவர் அணிக்கு கிடைத்த வாக்கு விவரம்
சென்னை : நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச்செயலாளராக விஷால் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணியும், நாசர் தலைமையில் பாண்டவர் அணியும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
அந்த 138 ஓட்டு எப்படி வந்தது...விஷால் அணி ஏன் கேள்வி கேட்கல...சந்தேகத்தை கிளப்பிய பிசாந்த்
நடிகர் சங்கத் தேர்தல்
தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.
வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது
இதையடுத்து, 3 ஆண்டுகளுக்கு இன்று காலை 8 மணி முதல் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குகள் எண்ணப்பட்ட. காலை வாக்குப்பதிவு தொடங்கும் போதே வாக்கு எண்ணிக்கையில் அதிக வித்தியாசம் இருப்பதாக கூறி பாக்யராஜ் அணியினர் வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் வாக்கு எண்ணிக்கை பாதிக்கப்பட்டது. சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜ், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு பிரஷாந்த் ஆகியோர் போட்டியிட்டனர்.
விஷால், கார்த்தி வெற்றி
இதையடுத்து, தற்போது நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்கு எண்ணி முடிக்கப்பட்டுள்ளது. இதில், நாசர் தலைமையிலான விஷால், கார்த்தி அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1720 வாக்குகளை பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐசரி கணேஷ்1032 வாக்குகளை பெற்றுள்ளார். பாண்டவர் அணி சார்பில் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பூச்சி முருகன் 1612 வாக்குகளும், கருணாஸ் 1605, நாசர் 1701 வாக்குகளும், பாக்யராஜ் 1054 வாக்குகளும் பெற்றுள்ளனர்.
குவியும் வாழ்த்து
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்க இருக்கும் நிர்வாகிகளுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பாராட்டுக்ளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. மேலும், பல பிரபலங்களும் நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற பாண்டவர் அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.