நடிகர் சங்கத் தேர்தல்…நாசர், விஷால், கார்த்தி அணி வெற்றி!
சென்னை : நடிகர் சங்கத் தேர்தலிவ் விஷால் அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது.
Recommended Video
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, 2019ல் நடந்த தேர்தலில் பாக்யராஜ் தலைமையில் ஒரு அணியும். நாசர் தலைமையில் விஷால், கார்த்தி உள்ளிட்டோர் சேர்ந்து மற்றொரு அணியாகவும் போட்டியிட்டனர். இத்தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால், வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.

தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டன. தேர்தல் செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து நாசர், விஷால், கார்த்தி ஆகியோர் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தனர். அதை விசாரித்த ஐகோர்ட், தேர்தல் செல்லும் என்றும், வாக்குகள் எண்ணிக்கைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து இன்று 8 மணி முதல் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் வாங்குகள் எண்ணப்பட்டன. இதில், நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால், பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட கார்த்தியும் வெற்றி பெற்றுள்ளார். நடிகர் நாசர் நடிகர் சங்கத்தின் மீண்டும் தலைவராகி உள்ளார். துணைத்லைவருக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











