Don't Miss!
- Automobiles சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நடிகர் சங்கத்தின் குருதட்சணை திட்டம் சிவக்குமார், சச்சு தொடங்கி வைத்தனர்
சென்னை: நடிகர் சங்கத்தின் குருதட்சணை திட்டத்தை நடிகர் சிவக்குமார், நடிகை சச்சு ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.
தமிழகமெங்கும் மூத்த தலைமுறை முதல் இளைய தலைமுறை அங்கத்தினர் வரையிலான கலைஞர்களின் முழு விபரங்கள் சேகரிக்கும் மற்றும் பதிவு செய்யும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
மூத்த மற்றும் நலிந்த கலைஞர்களுக்கு உதவி செய்யும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்திற்கு, நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் குருதட்சணை திட்டம் என்று பெயரிட்டுள்ளனர்.
இந்தத் திட்டத்தில் உறுப்பினர்களின் கலைத்திறன், முகவரி, குடும்பம் பற்றிய முழு விபரங்கள், குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் தேவப்பட்டால் அதைப் பற்றிய விபரங்கள் காப்பீடு என அனைத்து விபரங்களையும் நேரடியாக சேகரித்து பதிவு செய்து வருகின்றனர்.
மேலும் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கலைஞர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் ஒன்றையும் நடிகர் சங்க நிர்வாகிகள் இன்று தொடங்கி வைத்திருக்கின்றனர்.
தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான இந்தத் திட்டத்தை இன்று சென்னையில் தொடங்கி இருக்கும் நடிகர் சங்கம் விரைவில் அனைத்து மாவட்டங்களிலும் அங்கிருக்கும் நாடக சங்கங்களுடன் இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
அனைத்துக் கலைஞர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டவுடன் அவற்றை இணையதளத்தில் பதிவு செய்து அதன் மூலம் தேவையான உதவிகளை சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு வழங்கிட நடிகர் சங்கம் முடிவெடுத்து உள்ளது.