Don't Miss!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- News "மேட்டர் ரொம்ப சீரியஸ்!" மீண்டும் இந்தியாவை சீண்டும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ! என்ன தான் நடக்குது
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நடிகர் அதர்வாக்கு கொரோனா தொற்று… வீட்டில் தனிமையில் ஓய்வு !
சென்னை : அதர்வாவுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் மட்டும் 9,344 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 9344
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 9,344 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9,80,726 பேராக அதிகரித்துள்ளது.
கொரோனா
கொரோனாவுக்கு பலத்திரைப்பிரபலங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாதவன், நகைச்சுவை நடிகர் செந்தில் அவரது குடும்பத்தினர், சுந்தர் சி, சோனு சூட் ,ரன்பீர் சிங், அமீர் கான், ஆலியா பட், பவன் கல்யாண், டொவினோ தாமஸ் உள்ளிட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
தொற்று உறுதி
இந்நிலையில் நடிகர் அதர்வா கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கொரோனா அறிகுறி தெரிந்ததால் பரிசோதனை செய்ததாகவும் இதையடுத்து கொரேனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்
ஆலோசனை
தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ள போதிலும் கொரோனாவின் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தே காணப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், சுகாதாரத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்க இருப்பதாக கூறப்படுகிறது.