பொம்பளை சுகம் கேட்குது.. அதுவும் தினம் கேட்குது.. உண்மையை உடைத்த பப்லு!
சென்னை : நடிகர் பப்லு தன்னுடைய முதல் மனைவியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார். சமீபத்தில்தான் இவருக்கு விவாகரத்து கிடைத்தது.
இதையடுத்து தற்போது மீண்டும் திருமணம் செய்யும் முடிவை பப்லு எடுத்துள்ளார். லிவிங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் உள்ள இவர் விரைவில் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.
24 வயதேயான மலேசிய பெண்ணை இவர் திருமணம் செய்யவுள்ளதை அடுத்து சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.

நடிகர் பப்லு
நடிகர் பப்லு ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். பல படங்களில் வில்லனாகவும் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாகவும் நடித்துள்ள இவர் சின்னத்திரையிலும் எராளமான சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது கண்ணான கண்ணே என்ற சீரியலிலும் கௌதம் என்ற கேரக்டரில் நடித்துவரும் இவர், இந்த சீரியல் மூலமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சர்ச்சையில் சிக்கிய பப்லு
இதனிடையே தற்போது இவர் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். 57 வயதான பப்லு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய முதல் திருமணத்தை செய்துக் கொண்டார். முதல் மனைவியை காதல் திருமணம் செய்துக் கொண்டார். சில ஆண்டுகள் தொடர்ந்த இவர்களது திருமண வாழ்க்கை மனக்கசப்பை தர, இருவரும் பிரிந்தனர்.

மலேசிய பெண்
தொடர்ந்து விவாகரத்தும் அப்ளை செய்த நிலையில், சமீபத்தில் விவாகரத்து பெற்றனர். இதனிடையே தற்போது 24 வயதான மலேசிய பெண்ணை இவர் திருமணம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வயதில் இளம்பெண்ணை திருமணம் செய்யும் இவரது முடிவு, ரசிகர்களிடையே விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

பொம்பளை சுகம்
இதனிடையே தான் இளம் பெண்ணை திருமணம் செய்துக் கொள்வேன், குழந்தையும் பெற்றுக் கொள்வேன் உங்களுக்கு ஏன் வயிறு எரிகிறது என்று அவர் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் தற்போது தனக்கு பொம்பளை சுகும் கேட்பதாகவும், தினமும் கேட்பதாகவும் அவர் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளார்.

மகனை வைத்து சிம்பதி?
நடிகர் பப்லு எப்போதுமே தன்னுடைய வாழ்க்கையின் பல முடிவுகளை போல்டாக எடுப்பவர். தன்னுடைய கேரக்டர்களையும் போல்டாகவே தேர்ந்தெடுத்து நடித்தவர். தன்னுடைய மகனை வைத்து சிம்பதியாக தன்னுடைய அடுத்த திருமண முடிவை எடுத்துள்ளாரா என்ற கேள்விக்கும் இவர் தற்போது பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











