Don't Miss!
- News பிரதமர் மோடி பேச்சால்.. பாஜகவுக்கு நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம்.. ராகுல் காந்திக்கும் சிக்கல்!
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- Lifestyle போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஒரேயொரு கேள்வி கேட்ட வாணி ராணி சீரியலின் உதவி இயக்குனரை அறைந்த நடிகர் பப்லு
Recommended Video
சென்னை:வாணி ராணி சீரியலின் உதவி இயக்குனராக உள்ள அழகுவை நடிகர் பப்லு கன்னத்தில் அறைந்துள்ளார்.
ராதிகா சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து வரும் தொலைக்காட்சி தொடர் வாணி ராணி. இந்த தொடரில் பப்லு சாமிநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ராணியாக நடிக்கும் ராதிகாவின் கணவராக நடித்து வருகிறார் பப்லு.
ஷூட்டிங்
பல ஆண்டுகளாக ஓடிக் கொண்டிருக்கும் வாணி ராணி சீரியல் இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்தது. இந்த சீரியல் ஷூட்டிங்கிற்கு பப்லு எப்பொழுதுமே தாமதமாக தான் வருவார் என்று கூறப்படுகிறது.
கேள்வி
பப்லு வழக்கம் போன்று தாமதமாக வர சீனியர் உதவி இயக்குனரான அழகு அவரிடம் கேள்வி கேட்டுள்ளார். ஏன் லேட்டாக வந்தீர்கள் என்று அழகு கேட்டதும் பப்லு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம்.
எச்சரிக்கை
பப்லு தினமும் லேட்டாக வருவது மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டது குறித்து உதவி இயக்குனர் தயாரிப்பு நிறுவனத்திடம் புகார் தெரிவித்துள்ளார். அவர்களும் பப்லுவை அழைத்து எச்சரித்துள்ளனர்.
அறை
தயாரிப்பு நிர்வாகம் தன்னை அழைத்து எச்சரித்ததை அடுத்து பப்லுவுக்கு அழகு மீது கோபம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அழகுவுடன் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பேசிக் கொண்டிருந்தபோதே பப்லு அழகுவின் கன்னத்தில் அறைந்துவிட்டாராம்.
பாட்டி
ராதிகாவின் மகள் ரயனுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. தான் பாட்டி ஆகியுள்ள மகிழ்ச்சியில் உள்ளார் ராதிகா. இந்நிலையில் பப்லுவின் சம்பவத்தால் சின்னத் திரை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாணி ராணி சீரியலை ராதிகா தான் தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.