Don't Miss!
- Lifestyle உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற 6 அற்புதமான டிப்ஸ்..
- News முஸ்லீம்களுக்கு மட்டும்தான் நிறைய குழந்தைகள் இருக்காங்களா? மோடி வீட்டில் எத்தனை பேர் தெரியுமா? ஓவைசி
- Finance இனி பீட்சா முதல் பெப்சி வரை இவர்கள் கையில் தான்..!! வாரிசு கைக்கு மாறும் ஆர் ஜே கார்ப்பரேஷன்..!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கசந்தது காதல்... பாடகியை மணந்த ஹீரோவுக்கு விவாகரத்து வழங்கியது கோர்ட்!
சென்னை: நடிகர் 'வீரம்' பாலா- பாடகி அம்ருதாவுக்கு விவாகரத்து வழங்கியுள்ளது நீதிமன்றம்.
தமிழில், அன்பு படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாலா. காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம், கலிங்கா உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்துள்ளார். பின்னர் மலையாள சினிமாவுக்குச் சென்ற அங்கு, முன்னணி நடிகராக இருக்கிறார்.
இந்நிலையில் 'வீரம்' படத்தில் அஜித் தம்பிகளுள் ஒருவராக நடித்தார். இந்தப் படத்தி இயக்கிய 'சிறுத்தை' சிவா இவரது அண்ணன்.
பாலாவும் கேரளாவைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி அம்ருதாவும் காதலித்து வந்தனர். பின்னர் 2010-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அவந்திகா என்ற மகள் இருக்கிரார்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு பிரிந்தனர். ஆரம்பத்தில் இதுபற்றி வெளியில் காட்டிக் கொள்ளாமலிருந்த இருவரும், எங்கள் குடும்ப விஷயங்கள் பற்றி எதையும் வெளியிட வேண்டாம் என வேண்டுகோள் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் மனைவியை பிரிந்து விட்டதாக நடிகர் பாலா, அதிகாரபூர்வமாக அறிவித்தார். இந்த விவாகரத்து விவகாரம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளம் குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்குத் தொடர்ந்தார் பாலா. இந்த வழக்கில் நீதிமன்றம் நேற்று விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்துள்ளது. குழந்தி அவந்திகா, அம்மாவுடன் வளர்வார் என்று கூறப்பட்டுள்ளது.