டிவி நிகழ்ச்சியில் திடீர் என்று கதறி அழுத தாடி பாலாஜி
Recommended Video

சென்னை: நடிகர் தாடி பாலாஜி தனது மகள் போர்ஷிகாவை நினைத்து டிவி நிகழ்ச்சியில் அழுதுள்ளார்.
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜிக்கும், அவரது மனைவி நித்யாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து வாழ்கிறார்கள். தாடி பாலாஜி தன்னை அடித்து கொடுமைப்படுத்தியதாக நித்யா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தற்போது நித்யா தனது மகள் போர்ஷிகாவுடன் தனியாக வசித்து வருகிறார்.

டிவி நிகழ்ச்சி
தாடி பாலாஜி கிங்ஸ் ஆப் காமெடி நிகழ்ச்சியில் நடுவராக உள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குழந்தைகளை பாராட்டி பேசியபோது தனது மகள் போர்ஷிகாவின் நினைவு வந்து அழுதுவிட்டார்.

கொலை
தன்னையும், மகள் போர்ஷிகாவையும் ஒரு அறையில் அடைத்து வைத்து தாடி பாலாஜி கொலை செய்ய முயன்றதாக நித்யா பரபரப்பு புகார் தெரிவித்திருந்தார்.

பரபரப்பு
நித்யாவும், போர்ஷிகாவும் ஒரு அறையில் இருக்க தாடி பாலாஜி வெளியே தீ வைத்ததால் அந்த அறையில் புகை வர இருவரும் மூச்சு திணறுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

காயம்
தாடி பாலாஜி தன்னை மாடிப்படியில் இருந்து தள்ளிவிட்டு தன்னை கொலை செய்ய முயன்றதாகவும் நித்யா புகார் தெரிவித்துள்ளார். கணவரை பிரிந்து வாழும் நித்யா ஃபேஷன் ஷோக்களில் பிசியாக உள்ளார்.


Click it and Unblock the Notifications











