Don't Miss!
- News தலைகீழாக கட்டி தோலை உரிப்பேன்..என்னது மம்தாவா? வங்கத்தில் கொந்தளித்த அமித் ஷா! இப்படி சொல்லிட்டாரே!
- Lifestyle இந்த 4 ராசிக்காரங்களோட முதல் எதிரியே அவங்க ஈகோதானாம்... ஈகோவாலேயே நிறைய விஷயங்களை இழந்துருவாங்களாம்!
- Sports பவுலர்களை குறி வைத்து அடித்தேன்.. பதிரானாவிடம் எச்சரிக்கையாக இருந்தோம்.. ஸ்டாய்னிஸ் ஓபன் டாக்!
- Finance மோனாலிசா ஓவியத்தை பாட வைத்த மைக்ரோசாப்ட் ஏஐ vasa -1.. அசரவைக்கும் வீடியோ..!
- Automobiles ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
- Technology வெளுக்குது ஆர்டர்.. ரூ.15249 பட்ஜெட்ல AMOLED டிஸ்பிளே.. 45W சூப்பர்வூக்.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
தனது படத்தில் இருந்து திரிஷா விலகியது இதற்காகதான்.. உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்!
சென்னை: தனது படத்தில் இருந்து நடிகை திரிஷா விலகியதற்கான காரணத்தை நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
Recommended Video
நடிகை திரிஷ் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஹீரோயினாக உள்ளார் திரிஷா.
தமிழ் மட்டுமின்றி மலையாளம் தெலுங்கு இந்தி கன்னடம் ஆகிய மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம் என முன்னணி நடிகர்கள் பலருடனும் ஜோடியாக நடித்துள்ளார்.
"மாஸ்டர்" டிரைலரையாவது விடுங்கப்பா.. ரசிகர்கள் ஏக்கம்.. ட்விட்டரில் ஹாஸ்டேக் !
ஆச்சார்யா..
இதேபோல் மற்ற மொழியில் முன்னணி நடிகர்களுடனும் ஜோடியாக நடித்து வருகிறார் திரிஷா. இந்நிலையில் அண்மையில் தெலுங்கு சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவியில் ஆச்சார்யா என்ற படத்தில் கமிட்டானார். இந்தப் படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார்.
ரசிகர்கள் விலகல்
இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து நடிகை திரிஷா திடீரென விலகினார். இதனால் தெலுங்கு திரைத்துறையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆச்சார்யா படத்தில் திரிஷாவுக்கு பதில் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். திரிஷா திடீரென விலக காரணம் என்ன என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.
நடிகர் விளக்கம்
படத்தில் தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு முக்கியத்துவம் அளிக்காததால்தான் திரிஷா படத்தில் இருந்து விலகியதாக பேசப்பட்டது. ஆனால் அதுகுறித்து யாரும் உறுதியான தகவலை கூறவில்லை. இந்நிலையில் நடிகை திரிஷா படத்தில் இருந்து விலகிய காரணத்தை அப்படத்தின் ஹீரோவான சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
கால்ஷீர் இல்லை
அதாவது நடிகை திரிஷா மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க தனது மொத்த கால் ஷீட்டையும் கொடுத்துவிட்டாராம். இதனால் ஆச்சார்யா படத்தில் திரிஷாவால் தொடர முடியாமல் போய்விட்டது என நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் நிம்மதி
மேலும் படக்குழுவினருடன் திரிஷாவுக்கு எந்த மனக்கசப்பும் இல்லை. கதாப்பாத்திரத்திலும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் நடிகர் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார். திரிஷா ஏன் விலகினார் என்று குழம்பி வந்த ரசிகர்கள் சிரஞ்சீவியின் விளக்கத்தால் நிம்மதி அடைந்துள்ளனர்.