குலுகுலு படக்குழுவினர் மீது கேஸ் போட போகிறேன்: கூல் சுரேஷ் அதிரடி!

சென்னை : நடிகர் கூல் சுரேஷ் ஒவ்வொரு புதிய படங்களின் ரிலீசின்போதும் அந்தப் படங்கள் குறித்த விமர்சனங்களை வைத்து வருகிறார்.

படங்கள் குறித்த இவரது கமெண்ட்டை கேட்க ஏராளமான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பெரும்பாலும் படம் குறித்த பாசிட்டிவ் கமெண்ட்ஸ்களையே இவர் பதிவிட்டு வருகிறார். தொடர்ந்து வெந்து தணிந்தது காடு.. வணக்கத்தை போடு என்பது இவரது முழக்கமாக காணப்படுகிறது.

நடிகர் கூல் சுரேஷ்

நடிகர் கூல் சுரேஷ்

புதுப்படங்கள் வெளியாகும்போது அந்தப் படங்களின் நடிகர், நடிகைகள் திரையரங்குகளுக்கு வருகிறார்களோ இல்லையோ நடிகர் கூல் சுரேஷ் அங்கே ஆஜராகி விடுவார். அந்த புதிய படம் குறித்த விமர்சனங்களை இவர் தொடர்ந்து வைத்து வருகிறார். இவரது விமர்சனங்கள் பெரும்பாலும் பாசிட்டிவ்வாகவே காணப்படுகின்றன.

படங்கள் குறித்து விமர்சனம்

படங்கள் குறித்து விமர்சனம்

தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை, அந்த படங்களின் ரிலீசின்போதே இவர் கமெண்ட் செய்து வருவதால், இவரது விமர்சனங்களையும் படம் குறித்த பேட்டியையும் பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர் ஒவ்வொரு படத்தின் போதும், வெந்து தணிந்தது காடு என்றும் அந்த படத்தின் பெயரை சொல்லி வணக்கத்தை போடு என்றும் கூறுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

திரையரங்கு முன்பு விமர்சனம்

திரையரங்கு முன்பு விமர்சனம்

சில நேரங்களில் அபத்தமான கமெண்ட்களை இவர் வெளியிட்டாலும், அதுவும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக காணப்படுகிறது. சமீபத்தில் மாமனிதன் படத்தின் ரிலீசின்போது திரையரங்கு ஒன்றில் போய் இரவு தூங்கிவிட்டு காலையில் பல் துலக்கிக்கொண்டே இவர் படம் குறித்து பேட்டியளித்தார்.

வித்தியாசமான சந்தானம்

வித்தியாசமான சந்தானம்

இவ்வாறு தொடர்ந்து பல பேட்டிங்களை ஒவ்வொரு படத்தின்போதும் வெளியிடும் கூல் சுரேஷ், நேற்றைய தினம் வெளியான சந்தானத்தின் குலுகுலு படத்திற்கும் சிறப்பான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். படத்தில் இதுவரை இல்லாத வகையில் வித்தியாசமான சந்தானத்தை பார்க்க முடிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொரியன் ஸ்டைல் படம்

கொரியன் ஸ்டைல் படம்

படம் கொரியன் ஸ்டைலில் அமைந்துள்ளதாக தெரிவித்த சுரேஷ், இந்தப் படத்தின் நடிகர்கள் யாரும் திரையரங்குகளில் படத்தை பார்க்க வராதது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய பெயர் கூல் சுரேஷ் என்ற போதிலும், அனைவரும் தன்னை குலுகுலு என்றுதான் அழைப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கூல் சுரேஷ் கோபம்

கூல் சுரேஷ் கோபம்

நடிகர் சந்தானம், குலுகுலு படத்தின் தயாரிப்பாளர் ராஜ் நாராயணன் உள்ளிட்டவர்களும் தன்னை அப்படித்தான் அழைப்பார்கள் என்றும் கூறியுள்ளார். அப்படி இருக்கையில் தன்னுடைய ஒப்புதல் இல்லாமல் தன்னுடைய பெயரை படத்திற்கு வைத்துள்ளதாகவும் கூல் சுரேஷ் தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினார்.

 தயாரிப்பாளர் மீது வழக்கு

தயாரிப்பாளர் மீது வழக்கு

இது சம்பந்தமாக குலுகுலு படத்தின் தயாரிப்பாளர் ராஜ் நாராயணன் மீது மான நஷ்ட வழக்கை பதிவு செய்யவுள்ளதாகவும் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார். ராஜ் நாராயணன் நண்பனான தனக்கு துரோகம் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் படத்திற்கு நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X