சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு ரிலீஸ் தேதி அரசு விடுமுறை தேவை- கூல் சுரேஷ்
சென்னை : சிம்பு நடித்துள்ள வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகும் அன்று அரசு விடுமுறை அளிக்குமாறு நடிகர் கூல் சுரேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சிம்பு நடித்துள்ள வெந்துதணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15ந் தேதி வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தில் சித்தி இத்னானி, ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹம் ஆகியோர் லீட் ரோலில் நடித்துள்ளனர்.
சிம்பு முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், அவருக்கு ஜோடியாக குஜராத்தி நடிகை சித்தி இத்னானியும், அம்மாவாக ராதிகாவும் நடித்துள்ளனர்.

மூன்றாவது முறையாக
சிம்பு, கௌதம் வாசுதேவ் மேனன் காம்போவில் உருவாகி உள்ள மூன்றாவது திரைப்படம் இதுவாகும். இதற்கு முன்னதாக விண்ணைத்தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா என இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளனர். இசைபுயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் அனைத்து பாடல்களையும் தாமரை எழுதி உள்ளார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜென்ட் மூவில் வெளியிடுகிறது.

டிரைலர் ரிலீஸ்
வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வேல்ஸ் பல்கலைகழகத்தில் நேற்று மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில்,கௌதம் மேனன், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, ராதிகா,நாசர்,ஜீவா ஆகியோர் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கமல்ஹாசன் வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலரை வெளியிட்டார்.

முற்றிலும் வித்தியாசமான கதையா?
சாதாரணமான கிராமத்து இளைஞனாக இருக்கும் சிம்பு, பின்னாளில் கேங்ஸ்டாரா மாறுகிறார் என்பது டிரைலரில் தெளிவாக தெரிகிறது. இதுவும் வழக்கமான கேங் ஸ்டார் கதை போன்று இருக்குமா? அல்லது முற்றிலும் வித்தியாசமான கதையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இருப்பினும் நேற்று வெளியான டிரைலர் ரசிகளிடையே படத்தின் மீதான ஆவலை தூண்டி உள்ளது.

பொது விடுமுறை வேண்டும்
இந்நிலையில் நகைச்சுவை நடிகரும், சிம்புவின் தீவிர ரசிகருமான கூல் சுரேஷ் தமிழக அரசுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தமிழக முதலமைச்சர் ஐயா அவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். வருகிற செப்டம்பர் 15-ம் தேதி அன்று ரெட் ஜென்ட் வெளியிடும் சிம்பு நடித்துள்ள 'வெந்து தணிந்தது காடு' திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. எனவே அன்று மட்டும் அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இது உலகமகா வேண்டுகோளா இருக்கே
இதை நான் மட்டும் கேட்கவில்லை சிம்புவின் ஒட்டுமொத்த ரசிகர்களும் கேட்கிறார்கள் என்றார். இணையத்தில், கூல் சுரேஷ் அளித்துள்ள பேட்டி தற்போது டிராண்டாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலர் என்னது அரசு விடுமுறையா? எது எதுக்கு விடுமுறை கேட்பது என்று விவஸ்தை இல்லையா? இது உலகமகா வேண்டுகோளா இருக்கே..இவரது விசுவாசத்துக்கு ஒரு அளவே இல்லையா? என சிம்புவின் ரசிகர்களே அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











