Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
மலையாள வாசம் தனுஷுக்கு ரொம்ப பிடிச்சுப் போச்சு போல.. மீண்டும் கேரள நடிகையுடன் ஜோடி!
சென்னை: நடிகர் தனுஷ் மீண்டும் மலையாள நடிகையுடன் ஜோடி சேர உள்ளார்.
அசுரன் படத்தை தொடர்ந்து தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கவுள்ளார். இந்த படத்தின் மூலம் பிரபல மலையாள நடிகை ஐஸ்வர்யா லஷ்மி தமிழில் அறிமுகமாகிறார்.
’பேட்ட’ படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிடாமல் இருந்த கார்த்திக் சுப்புராஜ் தற்போது தனுஷ் படத்தை இயக்குவது உறுதியாகியுள்ளது.
இந்தப் படம் மூலம், தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தமிழில் அறிமுகமாகிறார். இவர் மலையாளத்தில் நடித்த 'மாயநதி’ 'வரதன்’ ஆகியப் படங்கள் பெரும் வெற்றியடைந்தன.
பார்வதி, நஸ்ரியா, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஷ்வரன், மடோனா செபாஸ்டியன் , அமலா பால், மஞ்சு வாரியர் வரிசையில் தனுஷுடன் ஜோடி சேர்ந்துள்ள மலையாள கதாநாயகி ஐஸ்வர்யா லஷ்மி.
இப்படத்தை 'ஒய் நாட் ஸ்டூடியோஸ்’ சார்பில் சசிகாந்த் தயாரிக்கிறார். ஆகஸ்ட் மாதத்திலிருந்து இதன் படபிடிப்புகள் தொடங்க உள்ளது. கொடி, வடசென்னை, படத்தை தொடர்ந்து, தனுஷும் சந்தோஷ் நாராயணனும் இப்படத்தில் மீண்டும் இணைகின்றனர்.
'ஜில் ஜங் ஜக்', 'அவள்' ஆகிய படங்களின் ஒளிப்பதிவாளர் ஷ்ரேயஸ் கிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.படம் குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கும் கார்த்திக் சுப்புராஜ், “என் மனதுக்கு நெருக்கமான கதையை படமாக்கி உங்களிடம் சமர்ப்பிக்க ஆவலாக உள்ளேன்” என்று கூறியுள்ளார்.
தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து அடுத்தபடியாக இந்த படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்கவுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் தலைப்பு மற்றும் வேறு சில தகவல்கள் விரைவில் வெளிவரும்.