Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் டாக்டர் ராஜசேகர் உடல்நிலை.. மருத்துவமனை அறிக்கை!
ஐதராபாத்: கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராஜசேகரின் உடல் நிலை சீராக இருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பிரபல நட்சத்திர தம்பதியான டாக்டர் ராஜசேகர், ஜீவிதா ஆகியோருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
அவர்கள் மகள்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
போதைப் பொருள் விவகாரம்.. 'அனேகன்' ஹீரோயின் மீது மற்றொரு நடிகை பரபரப்பு புகார்.. வழக்கறிஞர் மறுப்பு!
ராஜசேகர், ஜீவிதா
மகள்கள் ஷிவானி, ஷிவாத்மிகா குணமான நிலையில், டாக்டர் ராஜசேகரும் ஜீவிதாவும் சிகிச்சை பெற்று வந்தனர். தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை டாக்டர் ராஜசேகரும் உறுதிப்படுத்தி இருந்தார். 'மகள்கள் குணமடைந்துவிட்டார்கள். நானும் ஜீவிதாவும் இப்போது நன்றாக இருக்கிறோம். விரைவில் திரும்புவோம்' என்று கூறி இருந்தார்.
விரைவில் குணமாக
நடிகை ஜீவிதாவும் குணமானதை அடுத்து வீட்டுக்குத் திரும்பினார். இந்நிலையில் அவர்கள் மகள் ஷிவாத்மிகா, இரு தினங்களுக்கு முன், கொரோனாவுடன் அப்பா கடுமையாகப் போராடி வருவதாகவும் விரைவில் குணமடைய ரசிகர்கள் பிரார்த்திக்க வேண்டும் என்றும் ட்விட்டரில் கூறியிருந்தார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவர் உடல் நிலை பற்றி வதந்தி பரவியது.
நன்றாக இருக்கிறார்
பின்னர் மற்றொரு ட்விட்டில், உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை. நன்றாக இருக்கிறார். உடல்நலம் பெற்று வருகிறார். உங்கள் பிரார்த்தனைகள் தேவை. பீதியடைய வேண்டாம். வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கூறி இருந்தார்.
சீராக இருக்கிறது
இந்நிலையில் மருத்துவமனை நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டாக்டர் ராஜசேகர் உடல்நிலை சீராக இருப்பதாகவும் தொடர்ந்து மருத்துவக் குழு கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.