Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பாலியல் புகார் கூறி பணம் பறிக்க முயற்சி.. ஸ்ரீரெட்டி மீது போலீசில் நடிகர் புகார்
ஸ்ரீரெட்டி மீது விபச்சார வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நடிகர் வாராகி போலீசில் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
சென்னை: தமிழ் சினிமா இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது பாலியல் புகார் கூறி வரும் நடிகை ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என நடிகர் வாராகி சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகில் தனக்கு படவாய்ப்பு தருவதாக கூறி தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் மீது குற்றம் சாட்டி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.
தெலுங்கைத் தொடர்ந்து தற்போது தமிழ் திரையுலகில் தன்னை ஏமாற்றியவர்கள் என சிலரின் பெயர்களை அவர் அறிவித்து வருகிறார். தமிழில் முன்னணி இயக்குநர்களான முருகதாஸ், சுந்தர்.சி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீது அவர் பாலியல் குற்றச்சாட்டுத் தெரிவித்துள்ளார்.
பாலியல் புகார் கூறி பணம் பறிக்க முயற்சி.. ஸ்ரீரெட்டி மீது போலீசில் நடிகர் புகார் https://t.co/sqYKcPeiLM #varahi #SriReddy #srireddyleaks pic.twitter.com/N9fO8OFS5W
— Tamil Filmibeat (@FilmibeatTa) July 23, 2018
இந்நிலையில் ஸ்ரீரெட்டி மீது சென்னை காவல்துறை ஆணையரிடம் நடிகரும், சமூக ஆர்வலருமான வாராகி இன்று புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், 'ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறி பணம் பறிக்க முயற்சிக்கிறார். இந்திய கலாச்சாரத்திற்கும், பெண்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் செயல்படுகிறார். எனவே, ஸ்ரீரெட்டி மீது விபச்சார பிரிவின் கீழ் வழக்குப் பதிய வேண்டும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்திக்க ஸ்ரீரெட்டி முடிவு செய்துள்ளார். அதில் முக்கிய தமிழ் சினிமா பிரபலம் யாருடைய பெயரை அவர் வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.