Don't Miss!
- News சிவில் சர்வீஸ் தேர்வில் 9வது முயற்சியில் தூய்மை பணியாளர் மகன் வெற்றி.. கலங்க வைத்த ரியல் ஸ்டோரி
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆன்லைனில் ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு'.. சென்னை கமிஷனரிடம் ஜி.வி.பிரகாஷ் புகார்
சென்னை: ‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்ட இணையதளங்களை முடக்க வேண்டும் என சென்னை கமிஷனர் அலுவலத்தில் அப்பட நாயகன் ஜி.வி.பிரகாஷ் புகார் அளித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ள நான்காவது படம், 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்துக்குப் பிறகு ஜி.வி.பிரகாஷ்- ஆனந்தி இணைந்து நடிக்கும் படம். 'டார்லிங்' பட இயக்குநர் சாம் ஆண்டன் - ஜி.வி. கூட்டணியில் உருவான இப்படம், கடந்த வெள்ளியன்று ரிலீசானது.
ரஜினியின் 'பாட்ஷா' பட டயலாக் டைட்டிலாக கொண்டதால் இப்படம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்நிலையில், இப்படத்தை சில இணையதளங்கள் முறைகேடாக இணையத்தில் ஒளிபரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து அப்பட நாயகன் ஜி.வி.பிரகாஷ், இன்று சென்னை கமிஷனர் அலுவலகம் சென்று புகார் அளித்துள்ளார்.