Don't Miss!
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Lifestyle 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
5,000 மரக்கன்றுகள் நடுதல் துவக்க விழா: நடிகர் 'கஞ்சா கருப்பு' பங்கேற்பு
முத்துப்பேட்டை ரோட்டரி சங்கம் சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடுதல் துவக்க விழா கடந்த 29ம் தேதி இரவு 9.30 மணிக்கு நடைபெற்றது. முத்துப்பேட்டை ராமஜெயம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில், முத்துப்பேட்டை ரோட்டரி சங்க தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் ராஜ் மோகன், பொருளாளர் சிதம்பர சபாபதி, மெட்ரோ மாலிக், துணை ஆளுனர் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும் விழாவில் திரைப்பட நகைச்சுவை நடிகர் 'கஞ்சா' கருப்பு, நடிகர் சண்முக ராஜன், சரித்திரம், ராமேஸ்வரம் போன்ற படங்களின் தயாரிப்பாளர் நிஜாம் ராஜா மற்றும் சிங்கப்பூர் தொழிலதிபர் 'டத்தோ' ராம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இரவு நேரம் கடந்துவிட்டதால், விழாவில் சிறப்பு விருந்தினர்கள் சில நிமிடங்கள் மட்டுமே பேசினர்.
நடிகர் சண்முக ராஜன், தற்போது மதுரையில் நாடகக்கலை குழுவை நடத்தி வருகிறார். அவருடைய நாடகக்கலை குழு மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பல நாடகங்களை அரங்கேற்றி வருகிறது.
முத்துப்பேட்டையில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர் இடையே விழிப்புணர்வு ஏற்படும் வகையில் நாடகம் ஒன்றை விரைவில் அரங்கேற்ற முடிவு செய்துள்ளதாக சண்முகராஜன் தெரிவித்தார். அந்த விழிப்புணர்வு நாடகத்திற்கான செலவுகளை விழாவில் கலந்து கொண்ட தொழிலதிபர் ராம் ஏற்று கொள்வதாக தெரிவித்தார்.