Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சென்னையில் கொள்ளை வழக்கில் நடிகர் கைது: கொள்ளையடித்த பணத்தில் ஹீரோவாகியுள்ளார்
சென்னை: சென்னையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட நடிகர் கைது செய்யப்பட்டார். திருடிய பணத்தில் சினிமாவில் கதாநாயகன் வாய்ப்பை பெற்றுள்ளார்.
சென்னை வட பழனி பகுதியில் வழிப்பறி சம்பவங்கள் அதிகம் நடந்து வந்தது. இதில் தொடர்புடைய நெல்லையைச் சேர்ந்த பழைய குற்றவாளி செந்தில் என்ற குபேரனை(32) போலீசார் வலை வீசித் தேடி வந்தனர். அவருக்கு திருட்டு வழக்குகளிலும் தொடர்பு உண்டு.
அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் செந்திலை தீவிரமாக தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் சிக்கினார். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகள் மீட்கப்பட்டன.
அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது,
சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்தேன். முதலில் வாய்ப்பு கிடைக்காததால் திருட்டு தொழிலில் ஈடுபட்டேன். இருப்பினும் சினிமா தான் எனது கனவு ஆகும். கொள்ளையடித்த பணத்தில் ரூ.20 லட்சத்தை அளித்து சினிமா வாய்ப்பை பெற்றேன். விடலைப்பட்டாளம் என்ற படத்தின் நாயகனாகும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. முன்னதாக வெண்ணிலா கபடி குழு படத்தில் துணை நடிகராக நடித்துள்ளேன் என்றார்.
இதையடுத்து சினிமா இயக்குனர் ஒருவரையும் மற்றும் சிலரையும் போலீசார் தேடி வருகின்றனர்.