Don't Miss!
- News ஏசி ஓடுதா? மேட்ச் நடக்குதா? 18ம் தேதி என்னாச்சு? சூப்பர் சர்ப்ரைஸ் தந்த தமிழக மின்வாரியம்..மகிழ்ச்சி
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Sports தோல்வியின் போது ஒளிந்துகொள்ளும் ருதுராஜ்.. செய்தியாளர்களை சந்திக்கவே பயம்.. சோகத்தில் சிஎஸ்கே!
- Finance பாகிஸ்தானுக்கு ஆயுதம் சப்ளை செய்த சீனா.. கண்டுபிடித்து வெளுத்த அமெரிக்கா..!!
- Technology புரட்டிப்போடும் பட்ஜெட்.. ரூ.1099 போதும்.. MAP நேவிகேஷன்.. HD டிஸ்பிளே.. 230mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
இடியாக இறங்கியுள்ளது.. ஏற்க முடியவில்லை.. எப்படி ஆறுதல் சொல்வது.. நடிகர் இமான் உருக்கம்!
சென்னை: கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமாரின் மறைவை தன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என நடிகர் இமான் உருக்கமாக கூறியுள்ளார்.
Recommended Video
காங்கிரஸ் கட்சியின் எம்பியும் வசந்த் அன்ட் கோ நிறுவனத்தின் நிறுவனருமான வசந்தகுமார் நேற்று மாலை காலமானார். 70 வயதான வசந்த குமார் கடந்த 11ஆம் தேதி கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அடுத்தடுத்த நாட்களில் அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பொதுமக்கள் அஞ்சலி
இறுதியாக அவருக்கு கொரோனா நெகட்டிவ் என உறுதி செய்யப்பட்டதால் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
தலைவர்கள் இரங்கல்
அவரது நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், பொதுமக்கள் என பலரும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியன் தலைவர் சோனியா காந்தி, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் இமான் அண்ணாச்சி
இதேபோல் திரைத்துறை பிரபலங்கள் பலரும் வசந்தகுமாரின் மறைவுக்கு சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பலர் நேரில் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் இமான் அண்ணாச்சியும் வசந்தகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
இடியாக இறங்கியுள்ளது
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இமான்,
வசந்தகுமாரின் மறைவை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்றும் அவரது மறைவு இடியாக இறங்கியுள்ளது. அருமையான நண்பர், அவருடன் தங்கி பிரச்சாரம் செய்துள்ளேன்
அவர் புகழ் மறையாது
குடும்பத்திற்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை என்றும் உருக்கமாக கூறியுள்ளார். அவர் மறைந்தாலும் அவர் புகழ் மறையாது, அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்றார்.